Skip to main content

செளடையாவின் வயலின்

 வயலின் என்ற ஒன்றை நான் அறிந்தது வானொலிப் பெட்டி மூலமாக. ஆகாஷவாணி ஒலிபரப்பு துவங்கு முன் ஒரு இசை வரும். அது தான் வயலின் என்று பிற்பாடு தெரிந்தது. அந்த வயலினோடு சுருதி சேர்த்த வண்ணம் ஒரு தம்பூரா ஒலியும் ரீங்காரமிடும். அம்மா காபி போடுவதற்காக கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைப்பார்கள். நீர் மெல்ல மெல்லக் சூடேறி கொதி நிலைக்கு வரும் போது ஒரு ஓசை எழும். சுருதி சேர்த்த தம்பூரா ஒலியோடு மனம் அதை ஒப்பிட்டுப் பார்க்கும். காபி போடும் போது அம்மா ‘பரிமள ரங்கா எழுந்திரும்’ என்று பாடும் பூபாளம் சுருதி சுத்தமாக இருக்கும்.



சிறு வயதில் கேட்ட ஒரு கச்சேரியில் வயலின் இசை ஒன்று இணைந்து ஒலித்தது. அந்த ஓசை மாறுபட்டு இருந்தது. அது யார் வாசித்தது என்று கேட்டு அறிய முயன்றேன். அந்த ஓலியை எழுப்பியவர் மைசூர் செளடையா என்று அறிந்தேன். அவர் வாசித்தது அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு என்றும் தெரிந்து கொண்டேன்.




சாதாரணமாக வயலினில் நான்கு நரம்புகள் அல்லது ஐந்து இருக்கலாம். செளடையாவின் வயலினில் ஏழு நரம்புகள் இருக்கும். எனவே தான் நான் கேட்ட மாறுபட்ட ஒலி. எனவே தான் செளடையாவின் வயலின் பாடகர் குரல் போலவே பேசும். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். நான் கேட்ட சில பெண்களின் குரல் போல இருக்கும்.


செளடையாவின் வயலினைப் பற்றி நினைக்கும் போது செல்லோ ( Cello) என்ற வாத்தியம் நினைவுக்கு வந்தது. வயலின் போன்றே தோற்றமளிக்கும் இது அளவில் பெரியது. கையில் ஏந்த முடியாதது. 


நெஞ்சம் மறப்பதில்லை என்று ஒரு திரைப்படம். அதில் கதாநாயகனுக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் எல்லாம் வரும். ஒரு மாதிரியான திகில் படம். பின்னணி இசையில் பெரிதும் செல்லோ என்ற வாத்தியம் ஒலிக்கும். அந்த ஒலி மனதில் சென்று மெல்ல அதிர்ந்து ஒலிக்கும். ஒரு பயத்தை மனதில் உருவாக்கும். எப்படி எல்லாம் பீதியைக் கிளப்புவது என்று இசையமைப்பாளர்களுக்குத் தெரியும்.



துவக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற மெட்டை இசைப்பது செல்லோ (Cello)






Comments

  1. அருமை. பல நாட்களுக்குப் பின்னர் உனது எழுத்து. 👌

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஒரு சிறிய இடைவெளி

      Delete
  2. ரசனைக்கார அண்ணா👏👏. தொடர்ந்து ரசித்ததை பகிரவும்.

    ReplyDelete
  3. Aahaa, you took me to my primary school days in Triplicane in late 60s (now it's my age), when we bought a 'gec' radio first time in the neighborhood and Amma used to switch on (I think, at 4.55 am) this 'violin' would wake me up coz my shayam was right under the wall-shelf where this 'gec' was installed. Then comes the 'vande maatharam'..aahaa today we celebrate the 150 years of this song. It is divine driven for you to post this...Dharamshala Venkataswamy Naidu mattum ennavaam..alarum appadithaan..enga Thiruvallikkeni vaasi..

    ReplyDelete
    Replies
    1. It was Dwaram Venkataswamy Naidu..Not Dharmashala - ellaam therinjamaadhiri auto-fill mundhirikottai maathiduthu..sorry

      Delete
  4. நான் 1965 ல் இருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலில் கச்சேரி கேட்டிருக்கிறேன். கல்யார மண்டபத்தில் தான் நடக்கும். அப்போது பிரபல வித்வான்களுக்கு எல்லாம் சௌடையா தான் வயலின்.
    இப்போதும் பழைய கச்சேரி கேட்கும்போது இவர் ஞாபகம் நிச்சயம் வரும்.நினைவு பதிப்புக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமனாதன். கல்யாண மண்டபம் கச்சேரிகள் எனது நினைவிலும் நிழலாடுகிறது

      Delete
  5. பெங்களூரில் சொளடையா ஹால் என்று கட்டியிருக்கிறார்கள். கட்டிடம் வயலின் பாணியில் இருக்கும். நிறைய நிகழ்ச்சிகள் அங்கு நடக்கின்றன.

    ReplyDelete
  6. I thoroughly enjoyed this write-up. The title bgm of NM is stunning.

    Why this long gap -writer's block?-,Write frequently.

    ReplyDelete
    Replies
    1. Thanks Ram. Yes I shall do as suggested by you. Thanks again for the support

      Delete
    2. Ram Look at the mix of instruments played. Cello violin flute veena clarinet and bangos

      Delete
  7. This post feels like the background score of life — that quiet rhythm beneath everything, steady, intentional, and beautifully composed.

    ReplyDelete
  8. Yes. Seldom attention is paid to the beauty of the rhythm

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...