Skip to main content

பூவாகி காயாகி

 I was once a tree- all green.

Very tall, bobbing in the wind.

I had leaves, branches.

And occasional flowers.

I, too, had a name.

A woman. A mother.

Once a tree.

I brush them aside,

My tears, an upright foliage

Lying heavy on my chest.


Ranu Uniyal

This Could Be a Love Poem for You

Collection of Poems


நான் முன்பொரு காலம் ஒரு மரமாக இருந்தேன்

மிகவும் உயரம் எங்கும் பசுமை

எனக்கு இலைகள் இருந்தன

கிளைகள் இருந்தன

அரிதாக மலர்கள்

எனக்கும் ஒரு பெயர் உண்டு

ஒரு பெண். ஒரு அன்னை

முன்பு ஒரு மரம்

நான் அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளுகிறேன் 

நிமிர்ந்திருக்கும் இலைகள் போல

எனது கண்ணீர்த் துளிகள்

இதயத்தில் கனமாக விழுந்து கிடக்கிறது


ரானு உனியல் 

தமிழில்

தி சந்தானம்


பெண் மரமாக தன்னை நினைக்கிறாள்.

மலராக முகிழ்க்கிறாள். கனியாக இனிக்கிறாள். தண்ணென்று நிழல் தருகிறாள். சுற்றம் என்னும் பறவைகள் எல்லாம் அருகில் கூடிக் கலகலப்பாய் சிரிப்பதை ரசிக்கிறாள்.


ஜெய்ஹிந்த்புரம் என்றெல்லாம் மதுரையில் ஒரு பகுதிக்குப் பெயர் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பதினைந்து வருடம் ஆகியிருந்தது. நேரு என்று ஒரு தலைவர் இருந்தார். அவரை நேசிக்கும் மனிதர்களும் இருந்தார்கள்.

அங்கே ஒரு சினிமா தியேட்டரும் இருந்தது.

தியேட்டர் என்ற அந்தஸ்து தர முடியாது. அது கூரை வேய்ந்த டூரிங் டாக்கீஸ் தான். ஸ்ரீமுருகன் என்ற பெயரைத் தாங்கி இருந்தது. அங்கு அன்னை என்று ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். தெளிவில்லாமல் சில காட்சிகள் ஞாபகம் இருக்கிறது. தலையில் கட்டுப் போட்டபடி ஒரு இளைஞன் ரயில் தண்டவாளங்களின் குறுக்கே நடப்பது போல். அன்னை என்பவள் நீ தானா என்று ஒரு பாடல் காட்சி. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் வளருகிறானோ? என்ன என்னவோ உணர்ச்சிப் போராட்டங்கள். சரிவர அப்போது புரிந்ததில்லை.


பூவாகிக் காயாகி என்று ஒரு நல்ல பாடல் இத்திரைப்படத்தில் உண்டு. அது நன்கு நினைவிருக்கிறது. வளர்ப்புக் குழந்தையை Perambulatorல் தள்ளிக் கொண்டே பானுமதி பாடுவதாகக் காட்சி.

பானுமதியின் குரல் பிரத்யேகமானது.

டூரிங் டாக்கீஸில் புறமெங்கும் திறந்திருக்கும். காற்று வரும். எங்கும் நிசப்தம் கூடியிருக்கும். பாடல் ஒலிக்கக் கேட்ட தருணம் மறக்க முடியாதது.








Comments

  1. இப்பவும் ஜெய்ஹிந்திபுரம்தானே? என்ன ஒரு நினைவாற்றல் உனக்கு? முருகனில் பார்த்த ஒரே படம் ஜெனரல் சக்கரவர்த்தி. நமக்கு ஆஸ்தான தியேட்டர் ஜெகதாதான். டி வி எஸ் நகரில் இருந்த வரை எங்களுக்கு அனுமதி ஜெகதாக்குத்தான். மதிய காட்சிக்கு வெயிலில் அசராமல் நடந்து லைன்ல நின்னு டிக்கட் வாங்கிய காலம். சில நல்ல படங்களுக்கு ரெண்டு பேருக்கு முன்னால டிக்கட் தீர்ந்து போய் அந்த குட்டி ஷட்டர் க்ளோஸ் பண்ணப்படும்போது துக்கம் மண்டிக்கொண்டு வரும். ஆனால் அதுக்காக எல்லாம் சோர்ந்து விடாமல் மீண்டும் படையெடுப்போம். சில சமயம் டிக்கட் காசு போக கடலை மிட்டாய்க்கும் காசு இருக்கும். அது கொண்டாட்டமான நாள்.🙂

    ReplyDelete
  2. நல்ல நினைவுகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...