Skip to main content

எய்த்தார்

 நேற்று (14.3.2026) மாலை செளந்தரராஜன் உயிர் பிரிந்தது. நட்புக்கு வயது உண்டா? அப்படி என்றால் நாற்பத்து மூன்று ஆண்டுகள் என்று சொல்லலாம். மரத்திலிருந்து இலை உதிர்வது போல ஒவ்வொருவராக நீங்குகிறார்கள்.


மூன்று நாட்களுக்கு முன்னால் என்னோடு பேசினார். சுகுமாரன் எழுதிய பெருவலி என்ற நாவலைப் பற்றி சொன்னார். வாசிப்பும் இலக்கியமும் ரசனையும் தானே எங்களை இணைக்கும் புள்ளிகளாக இருந்தன?


செளந்தர் புத்தகங்களை விரும்புபவர். விரும்பி வாசிப்பவர். வாசித்த புத்தகங்களைப் சேகரித்து வைப்பவர். சேகரித்த புத்தகங்களைத் தொட்டு உணர்ந்து மகிழ்பவர். ஆயிரக் கணக்கில் புத்தகங்கள் அவரது சேமிப்பில் உண்டு. அத்தனையும் படிக்கப்பட்டு அவருக்குப் பிரியமான பகுதிகளில் பென்சிலால் அடிக்கோடு இடப்பட்டிருக்கும்.


காலை பெங்களூர் விமான நிலையத்தில் ஸோனாவைப் பார்த்தேன். கோவை செல்வதற்கு Lay over ல் இருந்தாள். எனக்கும் அதே விமானம் தான். திகைப்பு பயம் சோகம் எல்லாம் அவள் முகத்தில் எழுதப் பட்டிருந்தது. பேசுவதற்கு வார்த்தை இல்லை. கண்களில் நீர் அரும்பியது. மெளனமான அசைவுகள் சோகத்தைப் பரிமாறிக் கொள்ள போதுமானதாக இருந்தன. ஸோனா செளந்தரின் ஒரே மகள்.


ஓரே விமானம். வேறு வேறு இருக்கைகள். எனக்கு அருகில் வர்ஷா. அவரவர் நினைவுகள்.


காலையில் செளந்தர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். குளிர் பெட்டிக் கண்ணாடிக்குள் செளந்தரின் தோற்றம். அவரது தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் அங்கே வீழ்த்தப் பட்டிருந்தன. நெற்றியில் பட்டையாகத் திருநீறு. அவர் திருநீறு எல்லாம் அணிபவர் அல்ல.

நல்லாத் தானேங்க இருந்தாரு..நேத்திக் காலைல என் கூடப் பேசினாரே..

அண்டை வீட்டுக்காரர்கள் பிரலாபங்கள்.

கண்ணாடிப் பெட்டியில் கை வைத்து கண்ணீர் உகுத்தேன். அரை மணிக்கு மேல் அங்கே அமர்ந்திருந்தேன். பின்பு இறுதியாக ஒரு முறை அமைதி ததும்பும் அந்த முகத்தைப் பார்த்தேன். கிளம்பி விட்டேன்.


எய்த்தார் எய்த்தார் என்று இல்லத்தாரும் புறத்தாரும் மொய்த்து ஆங்கலறி முயங்கத் தான் போகும் போது உன்மத்தர் போல் பித்தேயேறி அனுராகம் பொழியும் போது… என்ற திருவாய்மொழி மனதில் ஓடியது.


நீரில் குளித்தேன். நினைப்பு ஒழியவில்லை. அது ஒழியாது.





Comments

  1. காலையில் சொளந்தரின் மறைவு குறித்து எனக்கு தகவல் வந்தபோது சற்று நிலைகுழைந்தேன். மேற்படி இரங்கல் பதிவைப் பார்த்தபின் சோகம் அதிகமானது. அவருடன் பேசிய நாட்கள் நிழலாடுகின்றன. அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறேன்

    ReplyDelete
  2. நிழலாடும் நாட்கள் மறைவதில்லை. நெஞ்சத்துள் நினைவெல்லாம் மறப்பதில்லை

    ReplyDelete
  3. புகையோடும் முகில் கூட்டம் மூடுவதில்லை. புதிரான வாழ்வு ஒன்றும் புரிவதில்லை

    ReplyDelete
  4. கவித்துவமாக நிறையத் தோன்றுகிறது. நீர்க்குமிழிகள் போல உடைந்து விடுகிறது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...