Skip to main content

கறுப்பு என்பது

 சூல் கொண்டு அசையும் மேகத்

திரள்கள்

மழையில் நனைந்த பனைமர மேனி

……………….

கரவு,தனிமை, அச்சம்

கறுப்பு நிறத்தின் வெவ்வேறு சாயைகள்……..


இது எழுபதுகளில் வந்த நெரோலாக் பெயிண்ட்ஸ் விளம்பரக் கவிதை. அற்புதமான கவிதை. கறுப்பு நிறத்தைக் கொண்டாடிய கவிதை. கணையாழி பத்திரிக்கையில் பல வருடங்கள் முன்னால் படித்திருக்கிறேன். இந்த கவிதையைக் குறிப்பிட்டு சிலாகித்தவர் யாரென்று தெரியவில்லை.


இரவில் இருள் வந்து சூழும். இருள் கறுப்பாக இருக்கும். காலம் பேர்வது ஓர் காரிருள் ஊழி ஒத்ததால் என்று பேசும் நம்மாழ்வார் பாசுரம்.


ஆரம்பப் பள்ளியில் ஆசிரியை எழுதும் பலகை கறுப்பாக இருக்கும். சாக்பீஸால் எழுதி அழித்து அழித்து ஒரு சாம்பல் நிறம் கொண்டு விடும். பள்ளிக்கு ஆய்வாளர் வரும் போது ஊமத்தை இலை கொண்டு அதைத் தேய்ப்பார்கள் மீண்டும் கறுப்பாகி விடும்.


சிறு வயதில் கண்ணா கருமை நிறக் கண்ணா என்று ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். அந்தக் கறுப்புப் பெண்ணை யாரும் மணம் செய்து கொள்ள மாட்டார்கள். மனம் பார்க்க மறுப்பவர் முன் என்னை ஏன் படைத்தாய் என்று வருத்தப் படுவாள். அழுகையாக வரும்.


நான் போகும் கிராமத்து வழியில் கரிசல் மண்ணைப் பார்க்க முடியும். உழுது போட்ட கரிசல் மண்ணின் கறுப்பு பார்க்க அத்தனை அழகு.


எத்தனையோ வண்ணத் திரைப்படங்களைப் பார்த்தாலும் கறுப்பு வெள்ளைப் படங்கள் காட்டிய காட்சியின் அழகெல்லாம் மனதை விட்டு நீங்குவது இல்லை.


கறுப்பு என்பது நிறம் மட்டும் அல்ல. அது ஒரு உணர்வு.




ஓரு நாள் வானம் கறுப்பாகப் பொழியும்.

ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த சிறுவனின் ஆதங்க வெளிப்பாடான கவிதையின் துவக்கம் இது. எண்பதுகளில் வந்த ஒரு சிறு பத்திரிக்கையில் படித்து இருக்கிறேன். கவிதையை முழுவதும் நினைவில் கொள்ளாமல் போனோமே என்று மனம் வருந்துகிறது.


கறுப்பு இன மக்களுக்காகப் போராடியவர் மார்டின் லூதர் கிங். இவருடைய எனக்கொரு கனவு உண்டு என்ற பேச்சு உணர்ச்சிகரமானது. இணையத்தில் கேட்டிருக்கிறேன். 


இந்நாட்களில் கறுப்பு என்பது அரசியல் செயல்பாட்டின் ஒரு குறியீடு மட்டுமே. எல்லா அரசியல் இயக்கங்களும் கறுப்பை தனதாக்கிக் கொள்ளும் காலம்.


லாங்ஸ்டன் ஹுயூஸின் கவிதை ஓன்றோடு நிறைவு செய்வோம் 



இப்போது எல்லாம்

கனவு காண்பவர்களுக்கு 

கனவு கிடைப்பது இல்லை

பாடகர்களுக்குப் பாடலும்


சில இடங்களில்

கரிய இரவும்

குளிர்ந்த இரும்பும் 

நிலவுகின்றன


ஆனாலும்

கனவு திரும்பவும் வரும்

பாடல் தனது சிறைக் கதவை

உடைத்து வெளியே வரும்





Comments

  1. The vivid narration makes the essay read more like an engaging story. The movement between literature, history, cinema, identity, and lived experience reflects a wide-ranging thought process.

    ReplyDelete
  2. Yes, the thoughts wander like a search light that waves its beam across in the dark stage where the plays are held

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...