Skip to main content

ரகசியம்


“உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்”

சிறு வயதில் வானொலிப் பெட்டியில் ஒலித்த பாடல் நினைவுக்கு வருகிறது.

அந்த வயதில் இந்தப் பாடலைக் கேட்கும்பொது ஏனோ ஒரு பயம் தோன்றும்.

ரகசியம் என்றால் என்னவென்று அறியாத வயது. அதிலும் அந்த அடுத்த வரி-

“ஒருவரிடம் சொல்லி விடாதே”  ஆணைகளைக் கேட்டே வளரும் பருவம்.

“சட்டைப் பொத்தானைப் போடு”, நகத்தைக் கடிக்காதே” சோற்றை சிந்தாதே”

இப்படி எல்லாம். ஆணைகளைக் கேட்டு பிள்ளை மனம் தயங்கிக் குழம்பும் காலம்.  சொல்லி விடாதே என்று பாடும் அக்காவின் குரல் கவலையோடு கூட ஒரு பொறுப்புணர்வையும் தந்து விடும்.


ரகசியங்கள் ரகசியங்களாகவே பெரும்பாலும் இருக்கின்றன. இருக்க வேண்டும். நெஞ்சோடு வைத்து நெருப்போடு போவதில்லை. ரகசியம் மிக அரிதாக பகிரவும் படுகிறது. அப்படிப் பகிர நேர்ந்தால் மிக நெருக்கம் என்று நினைக்கும் ஓரிருவருடனே மட்டும் பகிரப் படுகிறது. ரகசியங்கள் உடைக்கப்படலாகாது. பெரும் நம்பிக்கை கொண்டு நம்மிடம் ஒப்படைக்கப்படுபவை அல்லவா? அடைக்கலம் வந்த பறவை என்று நினைத்து இறுதி வரை காக்க வேண்டும். ரகசியங்கள் பாதுகாக்கப் படாவிட்டால் நட்புக்கும் நெருக்கத்திற்கும் அர்த்தம் தான் ஏது?




“இரு கோடுகள்” என்ற திரைப்படம் நினைவுக்கு வருகிறது.  காசியில் தான் மணந்த தமிழ்ப் பெண் இறந்து விட்டாள் என்று மொழி புரியாமல் தவறாகப் புரிந்து கொள்கிறான் நாயகன். தென்னகம் வந்து வேறொரு பெண்ணை மணந்து கொள்கிறான். காலம் உருண்டோடுகிறது.  இரண்டு குழந்தைகள். கலெக்டர் ஆபீஸில் வேலை. வாழ்க்கை சாதாரணமாகச் சென்று கொண்டிருக்கிறது.


ஒரு நாள் இவன் வேலை பார்க்கும் அலுவலத்திற்கே மாற்றலாகி வருகிறாள் அவன்  முதல் மனைவி. அவள் கலெக்டர். இவன் தலைமை குமாஸ்தா. கலெக்டரின் உதவியாளர் இவனை அறிமுகப்படுத்தும் போது” இந்த அலுவலகத்தின் அதி முக்கியமான ரதசியமான கோப்புகளைப் பராமரிக்கிறார்”என்று கூறுகிறார். ஒரு வினாடி நாயகனை ஏறிட்டுப் பார்க்கிறாள் நாயகி. கடந்த காலம் இருவரின் கண்களில் நிழலாடி மறைகிறது. சுதாரித்தபடி நாயகி வாய் திறக்கிறாள். “ரகசியங்களைத் தொடர்ந்து காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்”  நாயகன் மெளனமாகத் தலை அசைக்கிறான்.  சிக்கலான நிலைமை ஆரம்பமாகிறது. தடுமாற்றங்களும். நாயகனால் ரகசியத்தை எத்தனை நாள் காக்க முடியும்?


என்ன செய்வது?  ரகசியம் ரகசியம் தானே?  அதை ஒருவருக்கும் சொல்லிவிடக் கூடாது அல்லவா?


தி சந்தானம்



Comments

  1. அச்சா வேறு வேறாக ஒலிக்கும் ஜானகியிடமும் ஜயந்தியிடமும்

    ReplyDelete
  2. ரகசியம் பரம ரகசியம்

    ReplyDelete
  3. Sabitha SrikanthVery very interesting. I liked the way of writing. பஹுத் அச்சா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...