Skip to main content

பாரதியும் மிஸ் ரீஸும்

 பாரதி சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரைகள் செறிவானவை. எளிய நடை,கருத்துத் தெளிவு கூடி வந்தவை. பன்முகத் தன்மை வாயந்தவை.  “ஹொக்கு” அதாவது ஹைக்கு(haiku) பற்றி “ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் எழுதுகிறார்- சிறிய வடிவம். பெரிய பொருள்.  சுருங்கச் சொல்லி விளக்குதல். அதுதான் ஹொக்கு. “மாடர்ன் ரிவ்யூ” என்ற பத்திரிகையில் நோகுச்சி என்ற ஜப்பானியக் கவிஞரின் கட்டுரை அடிப்படையில் இதை எழுதியிருக்கிறார்.

சொல் சிக்கனத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் மிஸ் ரீஸ் என்ற அமெரிக்கப்பெண் கவியின் பெயர் வருகிறது.


“ அமெரிக்காவில் மிஸ் ரீஸ் (Lizette Woodworth Reese) என்பதோர் கவிராணியிருக்கிறார். வேண்டாதவற்றைத் தள்ளி விடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற புலவர் பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமானப் பதச் சேர்க்கை,அநாவசியமான கருத்து விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப் போலே பதங்கள் கோக்கும் நல்ல தொழிலாளியாகிய அக்கவிராணி இங்கிலீஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள்...... “ என்று பாரதி எழுதிச் செல்கிறார் 




மிஸ் ரீஸின் கவிதைகளில் எனது தேர்வாக இரண்டு கவிதைகள்.தமிழில் செய்தேன்.


                                                       1


நான் மகிழ்கிறேன்

நான் நானாக வாழ்வதற்கு

வானம் நீலம் தரிப்பதற்கு

கிராமத்துத் தெருக்களுக்கு

பனி மெல்லச் சொரிவதற்கு


வெயில் பின்பு மழை

மழை பின்பு வெயில்

இதுவே வாழ்வின் வழி

வினைகள் தீரும் வரை


தாழ்ந்தாலும் உயர்ந்தாலும்

நாம் செய்ய வேண்டியது

வானத்திற்கு மிக அருகில்

நாம் வளர்வதை உறுதி செய்வது


                                                         2


நான் நேசிக்கிறேன்...நினைவுகள்..

ஒரு சமயம் துயருற்ற நினைவுகள்..

இப்பொழுதும் நன்கு நினைவு கூரும் போது

துயரம் தருவதில்லை

இருள் சேர்த்த, ஏமாற்றம் தந்த எல்லாவற்றிலிருந்தும்

எனது உயிர் விடுதலை பெற்று

உயர்ந்து எழுகிறது

மென்மையான கணங்கள்

ஒரே கதையை மறுபடி சொல்கிறது.

கடல் ஒரே தெய்வீக ராகத்தை

இழைக்கிறது; இசைக்கிறது

எனது மேகங்கள் எல்லாப் புகழோடும்

கிளர்ந்து எழுகிறது.

நான் நேசிக்கிறேன்

இந்த உலகம் எனதாகிறது


தி சந்தானம்


Comments

  1. அருமை.. சின்ன கல்லு பெத்த லாபம் (பஞ்சதந்திரம் டயலாக்) :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...