Skip to main content

நானும் ஒரு பூ நானும் ஒரு தீ

  குஞ்ஞுண்ணி கவிதைகள். இந்தப் புத்தகம் மகிழகம் வெளியீடு.இது மதுரைப் பதிப்பகம். விலை பன்னிரண்டு ரூபாய். மலையாளக் கவிதைகளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பா.ஆனந்தகுமார். முப்பது வருடங்களுக்கு முன்னால் வாங்கியிருக்கிறேன். பல ஊர்களுக்கு என்னோடு பயணம் செய்து தப்பிப்பிழைத்திருக்கிறது. புத்தக அலமாரியைக் குடையும் போது கிடைத்தது. மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். ஒரு வரியில் கவிதைகள். இரண்டு வரிகளில். நான்கு வரிகளில். ஐந்து வினாடிகள். அதிக பட்சம் பத்து வினாடிகளில் கவிதையைப் படித்து விட முடிகிறது. ஆனால் அதன் பொருள் மணியின் கார்வையைப் போல் மனதில் நீள்கிறது. நீண்டு ஒலிக்கிறது. ஊற்றுத் தண்ணீரைப் போல் மெல்லப் பெருகி வருகிறது. விவரிப்புகளைக் கடந்து நின்று நம்மைக் கண்டு பரிகசிக்கிறது. எத்தனை எளிமையோடு கூடி வருகிறது.

ஆவியிலே எளிமையுடையவன் பாக்கியவான் என்பது பைபிள் வாசகம்.

வார்த்தையை வசப்படுத்துவோன் வலியோன் என்கிறார் குஞ்ஞுண்ணி.

சில ஒரு வரிக்கவிதைகள் பழமொழி போலத் தொனிக்கின்றன.

இனி கவிதைகளைப் பார்ப்போம்.


நாட்டின் அகம் நாடகம். இது ஒரு கவிதை. ஒரு வரியில் முடிந்து விடுகிறது.


  1. பின்னால் மட்டும் மடங்குகின்ற கால்கள் கொண்டல்லவா

           முன்னால் பாய்கின்றான் மனிதன்.

 

      2.   ஒரு சிறிய மரம்

           அதிலொரு பெரிய வனம்

           அதுதான் என் மனம்


      3.   நாவே

            நீ காதுள்ளவரோடு பேசாதே

            என் காதே

            நீ நாவுள்ளவர் அருகாமையை நாடாதே


      4.   நானொரு வாடகை வீடு

            யாருடைய யார்

            இதில் வசிப்பது


      5.   நானுமொரு பூ

            சிறிய பூ

            எல்லோருக்குமுள்ள பூ


            நானுமொரு தீ

            பெரிய தீ

            எனக்குள்ள தீ




     6.    பூவின் முன்னால் செல்லும்போது

            வண்டாய் மாறக்கூடாது நான்

            வண்டென் முன்னால் வரும்போது

            பூவாய் நான் மலர வேண்டுமே


     7.   ஆறாக ஓடும் ஆறும்

            புழுவாக இழையும் பழுவும்

            நானாக அலையும் நானும்

            அற்புதமன்றோ உலகம்!


    8.     அகத்திலுள்ளது புறத்திலாகும்

             புறத்திலுள்ளது அகத்திலாகும்

             அகத்தும் புறத்துமில்லாதது

              கவிதையிலாகும்


    9.       பெரிய இவ்வுலகம் முழுதும் நன்றாக

              சிறிய ஒரு சூத்திரம்

செவியிலோதுவேன் நான்

              சுயம் நன்றாவீர்

              சுயம் நன்றாவீர்

              சுயம் நன்றாவீர்



கவிதைகளில் படிமங்கள் இல்லை. நேரடியாகப் பேசுகின்றன. உண்மையைச்

சுட்டுகின்றன.  காட்சி உடையவர்கள் காண்கிறார்கள்.



தி சந்தானம்







Comments

  1. மிக எளிமையான கவிதைகள். ரசிக்கத்தக்கது.

    ReplyDelete
  2. ஜீ! உங்கள் அலமாரியை இன்னும் குடைந்து பாருங்கள்.இந்த மாதிரியான பொக்கிஷங்கள் நிறைய இருக்கும். கவிதைகள் அருமை. உங்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்புராஜ். சுப்புராஜ் என்றே ஊகித்து அறிகிறேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...