Skip to main content

ஞானக்கூத்தன்

 



ஞானக்கூத்தனின் "என்  உளம் நிற்றி நீ" என்ற தொகுப்பை வாசித்தேன். பல வருடங்கள் கழித்து மதுரைக்கு வந்தேன். புத்தகக் கண்காட்சியில் அந்த கவிதைத் தொகுப்பை வாங்கினேன். ஞானக்கூத்தன் கவிதைகளில் ஓசை நயம் இருக்கும். மரபுக் கவிதைகள் போல. ஒரு சமயம் மதுரையில் இலக்கியசந்திப்பு.ஞானக்கூத்தனோடு.

மேலமாசி வீதியில் ஒரு சந்து. அங்கு ஒரு வீட்டு மாடியில் நடந்தது. பதினைந்து இருபது பேர் இருந்தோம்.

இசகுபிசகான கேள்விகளை லாகவமாக கையாண்டார். ஏற்கனவே ஞானக்கூத்தனின்

கவிதைகள் சிலவற்றோடு எனக்குப் பரிச்சயம் இருந்தது. அவையாவன...


அம்மாவின் பொய்கள் 


பெண்ணுடன் சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்


தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்


தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்


ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்


எத்தனைப் பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா


அத்தனைப் பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்


தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயா?


அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?


தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா


உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?



சரிவு


சூளைச் செங்கல் குவியலிலே

தனிக்கல் ஒன்று சரிகிறது.



தமிழ்


எனக்கும் தமிழ்தான் மூச்சு

ஆனால்

பிறர்மேல் அதைவிட மாட்டேன்


இப்படியாக. "அன்று வேறு கிழமை

என்ற தொகுப்பைப் படித்ததில்லை. "

கசடதபற " என்ற பெயரில் அவர் நடத்தியஇதழைப் பார்த்தது கூட கிடையாது.

ஞானக்கூத்தன் மயிலாடுதுறை அருகில் உள்ள திருஇந்தளூரைச் சேரந்தவர். 

என் தங்கையின் கணவர் அவரைத்

தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.

ஞானக்கூத்தன் திருவல்லிக்கேணியில்

இருந்திருக்கிறார்.  2016 ம் வருடம்

மறைந்தார். இவரைப் பற்றிய ஆவணப்

படம் இன்று பார்த்தேன்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்

எடுக்கப்பட்டது.

ஆவணப் படத்தின் பெயர் "இலை மேல் எழுத்து"

இணையத்தில் தேடிப் பாருங்கள்.


தி சந்தானம்








Comments

  1. போன மாசம்தான் பையனோட டீல் போட்டேன், இனி பொய் சொல்லி ஏமாத்த மாட்டேன்னு. அவனும் அந்தப் பொய்க்கு ஏங்குவானோ.. ஆரமிக்க வேண்டியதுதான். :) :) பேயோன் யாரு ஞானக் கூத்தனா அவர் மகனா?

    ReplyDelete
    Replies
    1. பேயோனைப் பற்றிப் பேசுவோர் பேசுகிறார். ஜெயமோகன் கூட பேசினாராம். நான் அவரை அறியேன்

      Delete
  2. //எனக்கும் தமிழ்தான் மூச்சு// தமிழ் தமிழ்னு ஒவ்வொருத்தர் கூவறதப் பார்த்து மாஸ்க் போட்டுக்க வேண்டியிருக்கு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...