Skip to main content

என்னோடு இரு என்றும்

 அது நூற்றாண்டுப் பழமையான பாடல். மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல்.  என்னோடு என்றும் இரு (Abide with me) என்ற பாடல்.குடியரசு தினக் கொண்டாட்டத்தின் இறுதியாக ஒரு சடங்கு நிகழும்.  அது Beating Retreat என்பது. அப்போது Abide with me  என்ற பாடலை  பாண்டு இசைப்பார்கள். அந்தப் பாடல் ஒரு பிரார்த்தனை போல ஒலிக்கும். பாடலை நான் தமிழில் இப்படி மொழிபெயர்த்தேன்.




என்னோடு இரு என்றும்

அந்தி வேகமாகச் சாய்கிறது 

இருள் அடர்ந்து கொண்டிருக்கிறது

மற்றவர் உதவி தவறும் போது

சுகங்கள் விட்டு விலகும் போது

உதவியற்றவரின் உதவியே!

ஓ! நீ என்னோடு இரு என்றும்


முடியும் போது வேகத்தில்

வாழ்வின் இந்தச் சிறிய தினம்

அலைகள் போல உள்வாங்குகிறது 

உலகின் ஆனந்தம் மங்குகிறது 

அதன் பெருமைகள் மங்குகின்றன

மாற்றமும்  அழிவும் எங்கும் காண்கின்றன 

ஓ! நீ மாறாமல் இருக்கிறாய்

என்னோடு இரு என்றும்


உன்னுடைய இருப்பு

கடந்து செல்லும்

ஒவ்வொரு நாழிகையிலும் வேண்டும்

உனது அருளே சபலத்தின் சக்தியை சாய்க்கும்

உன்னைத் தவிர யார்

எனக்கு வழிகாட்ட?

மேகம் சூழும் போதும்

கதிரொளி வீசும் போதும்

என்னோடு இரு

நான் எதிரியைக் கண்டு அஞ்சவில்லை

உன் கைகள் இருக்குது ஆசி வழங்க 

தீமைகள் என்னை அழுத்துவதில்லை 

கண்ணீர்த் துளியில் கசப்பில்லை 

இறப்பின் கொடுக்கு இருப்பதில்லை

கல்லறையே! உனக்கு வெற்றி இல்லை

நானே வெல்கிறேன் இன்னமும்

இறையே! நீ என்னுடன் இருந்தால்


மூடும் எந்தன் கண்கள் முன்னே

உனது சிலுவையை ஏந்திடு

இருளின் ஊடாக ஒளியைப் பாய்ச்சிடு

விண்ணை நோக்கி விரல்களைச் சுட்டு

சொர்க்கத்தின் காலை புலரட்டும் 

பூமியில் நிழல்கள் ஓடட்டும்

வாழ்வில்

சாவில்

இறையே! என்னோடு இரு என்றும்


இந்த வரிகளை எழுதி முடித்ததும் நெஞ்சில் அளவிட முடியாத அமைதி ஊறியது. 


இனி இந்தப் பாடல் கொண்டாட்டத்தின்

இறுதியில் ஒலிக்காது. வேறு ஒரு பாடல் இசைக்கப்படும்.


மாறுதல் தானே உலகின் நியதி.



Comments

  1. மதி : அருமை, சந்தானம். உடனுக்குடன் burning issue பற்றி நன்கு எழுதியுள்ளாய்.
    இந்த பாடல் கிறிஸ்தவ பாடல் புஸ்தகம் " பாமலை"யில் 36 வது பாடலாக தமிழில்
    உள்ளது.
    நாங்கள் ஆலய ஆராதனையில் பாடுவோம்.
    உன் மொழிபெயர்ப்பு அதனை ஒத்து உள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதி. இது ஆராதனைப் பாடல் என்று தெரியாது. பாடலில் ஒரு பொதுவான தன்மை, universality இருப்பதாகக் கருதுகிறேன்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...