Skip to main content

நீ தனியே நடக்கும் பாதை

The Path On Which You Are Walking Alone 

by Pär Lagerkvist



The lonely man is the weakest one.


Not because he is alone but because


He is denying what he is carrying


within himself.



Our soul, getting deeper, is the broad


river of life.



The path on which you are walking alone,


is leading away from yourself.





பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர். கவிஞர். நோபல் பரிசு வென்றவர். பாரபாஸ் என்ற இவரது நாவலுக்காக


க.நா.சுப்ரமணியன் இந்தக் கதையை அன்பு வழி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அன்பு வழி போல ஒரு நாவல் எழுதி விட மாட்டோமா என்ற ஆசையில் தான் எழுதிப் போகிறேன் என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 


பாரபாஸ் என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமீபத்தில் படித்து முடித்தேன். பாரபாஸ் கொள்ளையன். சிலுவையில் ஏற்றப்பட வேண்டியவன்.  பஸ்கா விருந்து நாளில் குற்றவாளி ஒருவனை விடுதலை செய்ய முடியும். பிலாத்து மக்களிடம் கேட்கிறான். 

நசரேயன் என்ற ஏசு அல்லது கொள்ளையன் பாரபாஸ் இவர்களில் யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று.

ஓருமித்த குரல்கள் எழுகின்றன. ஏசுவைச் சிலுவையில் ஏற்றுங்கள். பாரபாஸை விடுதலை செய்யுங்கள். அது அவ்வாறே நடக்கிறது. 


பாரபாஸ் என்ற நாவல் ஏசு சிலுவையில் அறையப்படுவதில் இருந்து துவங்குகிறது.

பாரபாஸின் பார்வையில் சொல்லப்படுகிறது. 


பாரபாஸ் நாவலை எழுதிய லாகர்க்விஸ்ட்டின் கவிதைதான் பதிவின் ஆரம்பத்தில் காண்பது.


எனது தமிழாக்கம் இதோ…


நீ தனியே நடக்கும் பாதை


தனிமை கொண்ட மனிதன் பலவீனமானவன்

அவன் தனியன் என்பதினால் அல்ல


அவன் எதைச்  சுமந்து கொண்டிருக்கிறானோ

அதை மறுப்பவனாக இருப்பதனால்


நமது ஆன்மா ஆழம் கொள்கிறது

அது அகலம் கொண்ட ஒரு நதியாகிறது 


நீ தனியே நடக்கும் பாதை

உன்னிடமிருந்தே விலகிச் செல்கிறது



பாதைகள் புதிரானவை. தனியே நடக்கும் மனிதர்களும் புதிரானவர்கள் தான்.






Comments

  1. நீ தனியே நடக்கும் பாதை

    உன்னிடமிருந்தே விலகிச் செல்கிறது...

    Wonderful translation 👍

    ReplyDelete
  2. 👏🏻👏🏻👏🏻

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...