Skip to main content

எனது மூதாதையரின் கிராமத்தில்

 

வாஸ்கோ போபா செர்பியக் கவிஞர். இவருடைய கவிதை மொழி இயல்பான பேச்சுத் தன்மை கொண்டிருக்கிறது. நாட்டார் கதைப் பாணியையும் தரித்திருக்கிறது. இவரது இரண்டு கவிதைகளைத் தேர்வு செய்து மொழி பெயர்க்க வாய்த்தது.




A Conceited Mistake

Once upon a time there was a mistake

So silly so small

That no one would even have noticed it

It couldn't bear

To see itself to hear of itself

It invented all manner of things

Just to prove

that it didn't really exist

It invented space

To put its proofs in

And time to keep its proofs

And the world to see its proofs

All it invented

Was not so silly

Nor so small

But was of course mistaken

Could it have been otherwise


Vasko Popa


தலைக்கனம் பிடித்த தவறு 

முன்பொரு காலத்தில் ஒரு தவறு இருந்தது

மிகவும் அற்பமான தவறு

மிகவும் சிறிய தவறு

யாரும் கவனிக்கக் கூட மாட்டாத தவறு

அதற்குப் பொறுக்க வில்லை 

தன்னைத் தானே காணவும்

தன்னைத் தானே கேட்கவும்

அது பலவற்றையும் கண்டறிந்தது

தான் இல்லவே இல்லை என்பதை நிரூபிக்க 

அது வெளியைக்  கண்டறிந்தது

தன் சான்றுகளை அங்கே இட்டு நிரப்ப

காலத்தை ..தன் சான்றுகளைப் பாதுகாக்க

உலகத்தை.. அந்த சான்றுகளைப் பார்க்க

அது கண்டறிந்தவை அனைத்தும் மிகவும் அற்பமானவை அல்ல

மிகவும் சிறியவை அல்ல

தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டவை

அது வேறு எவ்வாறு இருந்திருக்க முடியும்?


தமிழில் தி சந்தானம்



In The Village Of My Ancestors

Someone embraces me

Someone looks at me with the eyes of a wolf

Someone takes off his hat

So I can see him better

Everyone asks me

Do you know how I'm related to you

Unknown old men and women

Appropriate the names

Of young men and women from my memory

I ask one of them

Tell me for God's sake

Is George the Wolf still living

That's me he answers

With a voice from the next world

I touch his cheek with my hand

And beg him with my eyes

To tell me if I'm living too


Vasko Popa


எனது மூதாதையரின் கிராமத்தில்


சிலர் என்னைத் தழுவுகிறார்கள் 

சிலர் என்னை ஓநாய்ப் பார்வை பார்க்கிறார்கள்

சிலர் முண்டாசை அவிழ்க்கிறார்கள் 

நான் சரியாக அவர்களைப் பார்க்குமாறு

எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள், நான் உனக்கு என்ன சொந்தம் சொல்லு?

தெரியாத முதிய ஆண் பெண்கள்,  என் நினைவில் இருக்கும் இளைய ஆண் பெண் பெயர்களை எடுத்துக் கொள்கிறார்கள்

நான் அவர்களில் ஒருவரிடம் கேட்டேன் தயவு செய்து சொல்லுங்கள் ..பரமன் உயிரோடு இருக்கிறானா?

நான் தான்..  இதோ..  பதில் ஏதோ அடுத்த உலகத்திலிருந்து ஒலித்தது

நான் அவன் கன்னத்தைத் தொட்டேன் கண்களால் இறைஞ்சினேன் நானும் உயிரோடு இருக்கிறேனா சொல் என்று

தமிழில் தி சந்தானம்

குறிப்பு:  ஆங்கில மூலத்தில் இருந்த ஜார்ஜ் என்ற பெயர் பரமன் என்று மாற்றம் கண்டிருக்கிறது





Comments

  1. Very lovely thought aptly translated.

    ReplyDelete
  2. அருமையான கவிதைகளும், மொழிபெயர்ப்பும். பரமன் விளக்கம்லாம் எதுக்கு? புரியறதே..
    ஹேட் கூடத்தான் முண்டாசா மாறி இருக்கு.
    மண்ணின் மணம் வேணும்ல.. 🙂🙂தொடர்ந்து எழுது.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒரு பயம் தான்.

      Delete
  3. Andam Brahmandam..unarndhal, adangum ullankaiyin ullum...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...