Skip to main content

சின்ன விஷயங்கள்

                       சின்ன விஷயங்கள்

காலையில் பருவநிலை மாறியது. பனி உருகி அழுக்கான தண்ணீராக உருக்கொண்டிருந்தது. அதன் சில துளிகள் சிறிய தோள் உயரப் பின்கட்டு நோக்கிய சன்னல் வழியே வழிந்தது. கார்கள் தெருவில் பனிச் சகதியில் விரைந்து கொண்டிருந்தன. வெளியே இருள் வரத் துவங்கியது. உள்ளேயும் இருள் ஆரம்பித்திருந்தது.


அவன் படுக்கையறையில் சூட்கேஸில் துணிகளைத் திணித்தபடி இருந்தான். அப்போது அவள் கதவருகே வந்தாள்.


“நீ போவதில் எனக்கு சந்தோஷம்..

நீ போவதில் எனக்கு சந்தோஷம்.. நான் சொல்வது கேட்கிறதா?” என்றாள்.

அவன் சூட்கேஸில் எதையோ திணித்தபடி இருந்தான்.


“….மகனே! நீ போவதில் எனக்கு சந்தோஷம்” அவள் அழ ஆரம்பித்தாள். “என்னை முகத்துக்கு நேராக உன்னால் பார்க்க முடியுமா?” சொல்” என்றாள். பின்பு படுக்கை மீது குழந்தையின் புகைப்படம் இருந்ததைப் பார்த்தாள். அதைக் கையில் எடுத்தாள். அவன் அவளைப் பார்த்தான். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனையே வெறித்தாள். பின்பு திரும்பியபடி முன்னறைக்குச் சென்றாள்.

அவன் “அதை இங்கே கொண்டு வா” என்றான். “உன்னுடையதை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியேறு” என்றாள் அவள்.


அவன் பதில் சொல்லவில்லை. சூட்கேஸை இழுத்து மூடினான். கோட்டை அணிந்து கொண்டான். படுக்கை அறையைச் சுற்றிலும் பார்த்தான், விளக்கை அணைப்பதற்கு முன். பின்பு அவன் முன்னறைக்குச் சென்றான். அவள் சமையலறை வாசலில் குழந்தையை ஏந்தியபடி இருந்தாள்.


“குழந்தையை என்னிடம் கொடு” என்றான்


“உனக்கென்ன பைத்தியமா?”


“இல்லை, குழந்தையைக் கொடு. நான் யாரையாவது அனுப்பி குழந்தையின் சாமான்களை எடுத்துக் கொள்கிறேன்”


நீ குழந்தையைத் தொட முடியாது” என்றாள்.


குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது. அவள் குழந்தையின் தலையைச் சுற்றியிருந்த மப்ளரை எடுத்து விட்டாள். “ஓ. ஓ..” என்று குழந்தையைச் சமாதானப் படுத்தினாள்.

அவன் அவளை நெருங்கினான். “ கடவுள் மீது ஆணை” அவள் சமையலறைக்குள் பின் வாங்கினாள்.

“எனக்குக் குழந்தை வேண்டும்”

“வெளியே போ”

அவள் திரும்பிக் கொண்டு குழந்தையை அடுப்படி மூலையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டாள். அவன் அடுப்படிக்குக் குறுக்கே கைகளால் குழந்தையை உறுதியாகப் பற்றினான்.


“குழந்தையை விடு” என்றான்.

“ போ.. போய்விடு” என்று அவள் கத்தினாள். “ குழந்தையை ஒன்றும் செய்யாதே” என்றாள். “ நான் ஒன்றும் செய்ய மாட்டேன்” என்றான்.


சமையலறை சன்னல் ஒரு வெளிச்சமும் தரவில்லை. கிட்டத்தட்ட இருட்டு. அவன் ஒரு கையால் மடக்கிய அவள் கைகளைப் பிரிக்க முயன்றான். மறு கையால் குழந்தையின் அக்குளுக்குக் கீழே இறுகப் பற்றினான். அவள் தன் விரல்கள் வலுக்கட்டாயமாக பிரிக்கப்படுவதை உணர்ந்தாள். குழந்தை அவளிடமிருந்து நழுவிச் செல்வதை உணர்ந்தாள்.

“ஊஹூம்” தனது கைகள் தளர்வதை அறிந்து அவள் அலறினாள். குழந்தையின் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டாள். குழந்தையின் மணிக்கட்டைச் சுற்றிப் பிடித்தபடி அவள் பின்னே சாய்ந்தாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. கையை விட்டுக் குழந்தை செல்வது போல் உணர்ந்த அவன் வலுவாகத் தன்புறம் இழுத்தான்.


இப்படியாக இந்த விஷயம் நடந்தேறியது.


மூலம்   ரேமண்ட் கார்வர் 




தமிழில். தி சந்தானம்




Comments

  1. எப்பவும் போல நல்லா எழுதியிருக்க. அழகான நெகிழ்வான கதை. இன்னிக்கி எனக்கும் இதை மொழிபெயர்க்க ஆசையிடுத்து. வாட்ஸாப்ல அனுப்பறேன். படிச்சுட்டு எப்டி இருக்கு சொல்லு.

    ReplyDelete
  2. பார்றா.. எங்க அண்ணாத்த யூத்துடோய்...

    ReplyDelete
  3. அருமையான தெளிவான கதை. சந்தானத்தின் new look photo மிக அருமை

    ReplyDelete
  4. Excellent brief presentation

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...