Skip to main content

நினைப்பும் மறப்பும்

 



நம்மாழ்வார் திருவாய்மொழி ஆறாம் பத்து மூன்றாம் திருமொழியில் பாசுரங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன.  பாசுரங்கள் நெடுகிலும் 

ஒன்றுக்கு ஒன்று முரணான வார்த்தைகள் நயம்பட செறிவான பொருள் கொண்டு அமைந்திருக்கிறது.

படிக்கப் படிக்க எல்லையில்லாத பரவசம் பெருகுகிறது. 


சில பாசுரங்களைப் பார்க்கலாம்.


புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய்

எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்

திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்

கண்ணன் இன்னருளே கண்டுகொள்மின்கள் கைதவமே?   


நாம் கண்ட பொருள்


எல்லாம் கண்ணனின் இன்னருள் என்று ஆகும் போது பொய்ம்மையும் துன்பமும் என்ன செய்து விடும்?

இதை அறிந்து கொள்க.

புண்ணியமும் பாவமும் அவனே. 

இணைதலும் பிரிதலும் அவனே

நினைப்பும் மறப்பும் அவனே.

இருப்பதும் இல்லாததும் இவை அல்லாததுவும் அவனே.

வலிமையான மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகர் நகரில் அவன் இருக்கின்றான். 


திருவிண்ணகர் கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன்(ஒப்பிலியப்பன்) கோவில் என்று நீங்கள் அறிவீர்கள்.



Oh Deceit, Oh Sufferings,

Realise this

Everything is His sweet Grace

He is  virtue, He is sin

He is Togetherness, He is Separation

He is Remembrance, He is Forgetfulness

He is Nothing He is Everything 

He is not these Two

Kannan, the Lord who dwells in Thiruvinnagar,

The town with strong mansions



Here in this pasuram Nammalwar addresses the deceit and sufferings that abound all around.

He dwells at length to define Kannan, the Lord who dwells in Thiruvinnagar, His sweet Grace  through an array of antitheses.  



இன்னொரு பாசுரம்


கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்

மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்

செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்

பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே 


நாம் கண்ட பொருள்


கண்டு கொள்ளுங்கள்

கபடமும் நேர்மையும் அவன்.

கருமையும் வெண்மையும் அவன்.

உண்மையும் பொய்யும் அவன்.

இளமையும் முதுமையும் அவன்.

புதுமையும் பழமையும் அவன்.

அவனே பெரிய தெய்வங்கள் உடைய இந்த மூன்று உலகங்களும் செய்தான்.



Know this

He is Deceit and righteousness

He is Black and white

He is Truth and falsehood

He is Old and young

He is New and ancient 

He is there in Thiruvinnagar which is surrounded by strong walls

He made the three worlds where great Deities dwell


Here again in this Pasuram one can discern the beauty of antitheses and their profundity



பிறிதொன்று



நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்

வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்

பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை

செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே 


நாம் கண்ட பொருள்


செல்வம் நிரம்பிய குடும்பங்கள் திருவிண்ணகரில் இருக்கின்றன. எங்கும் பரந்திருக்கும் பெருமான் அங்கே இருக்கிறான். 

வறுமையும் செல்வமும் அவன்.

நரகமும் சொர்க்கமும் அவன்

பகையும் நட்பும் அவன்

விஷமும் அவன்.

அமுதும் அவன்.

அவனே என்னை ஆட்கொண்டவன். 



He is Penury and wealth

He is Hell and Heaven

He is Enmity and friendship

He is Poison and elixir

He is all pervading

He has cast his influence over me

I have seen him in Thiruvinnagar

Where families abound in wealth



Again the poetic beauty of the stream of antitheses leaves you enthralled and you are lost in contemplation.






Comments

  1. The coexistence of contrasting concepts profoundly reflects the nature of universal duality. Thank you for this collection of related pasurams: He is everything. He is nothing. Indeed.

    ReplyDelete
    Replies
    1. Thank you. Much remains for contemplation and understanding

      Delete
  2. மூன்று பாசுரங்களும் பொருள் பொதிந்தது. அர்த்தங்களை புரிந்து கொண்டேன். மொழி பெயர்ப்பு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...