Skip to main content

புகை நடுவில் தீ



பாரதியின் பாடல்களை ஆழ்ந்து கற்க என ஒரு காலம் இருந்தது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால். பகைவனுக்கு அருள்வாய் என்ற பாடல் மனதைக் கவர்வதாக இருந்தது.


உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்தபின் உள்ள நிறைவாமோ என்ற வரிகள் சிந்திக்க வைத்தது.  “அவனது உள்ள நிறைவிலும் ஓர் கள்ளம் புகுந்தது” என்று கல்கி தனது கதை ஒன்றில் அப்படியே பாரதியின் வரியை எடுத்தாண்டிருந்தார்.


சாதாரணமாக கர்நாடக இசைக் கச்சேரிகளில் குறிப்பிட்ட சில பாரதி பாடல்களே ஆட்சி செய்யும். சின்னஞ்சிறு கிளியே என்ற பாடல் யாரும் சாதாரணமாகக் கச்சேரிகளில் பாடக் கேட்கலாம்.


பகைவனுக்கருள்வாய் என்ற பாடலைச் சஞ்சய் சுப்ரமணியன் பாடக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

பாடல் வரிகளையும் அதன் ஆங்கில வடிவத்தையும் பார்க்கலாம்.


பின்பு சஞ்சய் பாடுவதைக் கேட்கலாம்.


பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!

பகைவனுக் கருள்வாய்!


புகை நடுவினில் தீயிருப்பதைப்

பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!

பூமியிற் கண்டோமே.

பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!

பரமன் வாழ்கின்றான் 


சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்

செய்தியறியாயோ?

நன்னெஞ்சே!

குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்

கொடி வளராதோ?-நன்னெஞ்சே! 


உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்

உள்ள நிறைவாமோ?-நன்னெஞ்சே

தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே! 


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது

வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!

தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற

சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! 


தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!

அன்னை பராசக்தி அவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! 


Bless your enemy

My heart

Bless your enemy


The eye discerns 

The raging fire

Inside of the smoke


The Greatest one

The Love dwells deep inside

The bitter enmity 


The purest pearl

From the oyster comes

Don't you know, my heart?


The flower blooms

From trash and slime

Don't you know, my heart?


If stealth enters

The heart's content

Will it be heart's content?


A drop of poison

In the honey pure,

Will it be honey again?


To think of lowness 

When life ahead

Will it be fair to life?


A tiger out to devour you

You praise her with love

Mother Shakthi takes that form

Bow before Her, My heart!


In English

T Santhanam





Comments

  1. பாரதியின் நீண்ட பாடல் வரிகள். நிதானமாகப் படித்தேன். அருமையான மொழி பெயர்ப்பு. சஞ்சயின் இந்தப் பாட்டு கேட்டதில்லை.
    நல்ல பதிவு. ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...