Skip to main content

உங்கள் மனதும் என் மனதும்

 



முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ஹான் ஷானின் Cold Mountain தொகுப்பிலிருந்து மேலும் சில கவிதைகளைப் பார்க்கலாம்

If there’s something good, delight!

Seize the moment while it flies!

Though life can last a hundred years,

Who’s seen their thirty thousand days?

Just an instant then you’re gone.

Why sit whining over things?

When you’ve read the Classics through,

You’ll know quite enough of death.


ஏதாவது நன்றாக இருந்தால், ஆனந்தம் கொள்

பறந்து செல்லும் போதே அந்தக் கணத்தைப் பற்றிக் கொள்

வாழ்க்கை நூறு வருடங்களாக இருக்கலாம்

முப்பதாயிரம் நாட்களைக் கண்டவர் யார்?

ஒரு சிறு கணம்.. நீ போய்விடுவாய்

நின்று பலதுக்காகவும் புலம்புவது என்ன?

செவ்விலக்கியங்களைப் படித்து முடித்து விட்டால்

சாவைப் பற்றி போதுமான அளவு தெரிந்து கொண்டு விடுவாய்


Where’s the trail to Cold Mountain?

Cold Mountain? There’s no clear way.

Ice, in summer, is still frozen.

Bright sun shines through thick fog.

You won’t get there following me.

Your heart and mine are not the same.

If your heart was like mine,

You’d have made it, and be there!


குளிர் மலைக்குச் செல்லும் பாதை எங்கே?

குளிர் மலைக்கா? சரியான பாதை என்று இல்லை

பனி, கோடையில் கூட  இன்னமும் உறைந்தே இருக்கிறது

அடர்ந்து மூடிய பனி ஊடே சூரிய ஒளி

செல்கிறது

என்னைத் தொடர்வதால் நீங்கள் அங்கே வந்து சேர முடியாது

உங்கள் மனதும் எனதும் ஒன்றல்ல

உங்கள் மனது எனது போலிருந்தால்

நீங்கள் அங்கே வந்து அடைந்திருப்பீர்களே 


Cold Mountain’s full of strange sights

Men who go there end by being scared.

Water glints and gleams in the moon,

Grasses sigh and sing in the wind.

The bare plum blooms again with snow,

Naked branches have clouds for leaves.

When it rains, the mountain shines –

In bad weather you’ll not make this climb


குளிர் மலை முழுதும் வினோதக் காட்சிகள்

அங்கே போகும் மனிதர்கள் பயத்தில் தான் முடிந்து போகிறார்கள்

நிலவின் வெளிச்சத்தில் நீர் பளபளத்து மின்னுகிறது

புல்லெல்லாம் பெருமூச்சு விடுகின்றன 

மேலும் காற்றில் பாடுகின்றன

ப்ளம் மலர்கள் மீண்டும் பனியோடு பூக்கின்றன.

இலையற்ற கிளைகள் மேகங்களை இலையாகக் கொண்டன 

மழை பெய்யும் போது மலை பளபளக்கிறது 

மோசமான வானிலையில் நீங்கள் 

இது போல மலேயேற மாட்டீர்கள்




Comments

  1. அருமை. பகிர்தலுக்கும் மொழிபெயர்ப்புக்கும்.

    ReplyDelete
  2. Lovely Translation as always. Your selections are always profound and different.

    ReplyDelete
    Replies
    1. Thank you. I took the cue from Sti S Ramakrishnan. Selection, of course, is mine

      Delete
  3. அருமையான தேர்வு. நல்ல மொழி பெயர்ப்பு. ரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...