Skip to main content

உண்மை அறிந்தவர்

 



மாயையைப் பழித்தல் 


உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?

மாயையே-மனத்

திண்மையுள்ளாரை நீ செய்வதும்

ஒன்றுண்டோ !-மாயையே!


எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்

மாயையே-நீ

சித்தத் தெளிவெனுந் தீயின்முன்

நிற்பாயோ?-மாயையே!



என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்

கெட்ட மாயையே!-நான்

உன்னைக் கெடுப்பது உறுதியென்றே

உணர்-மாயையே!


சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு

மாயையே!-இந்தத்

தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்

செய்வாய்!-மாயையே!


இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப

மாயையே!-தெளிந்

தொருமை கண்டார் முன்னம் ஓடாது

நிற்பையோ?-மாயையே!


நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ

மாயையே-சிங்கம்

நாய்தரக் கொள்ளுமோ நல்லர

சாட்சியை-மாயையே!


என்னிச்சை கொண்டுனை யெற்றி விட

வல்லேன் மாயையே!-இனி

உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்

வராது காண்-மாயையே!


யார்க்கும் குடியல்லேன் யானென்ப

தோர்ந்தனன் மாயையே!-உன்றன்

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை-மாயையே!


பாரதியின் கவிதைகளில் நான் விரும்பிப் படிக்கும் கவிதைகளில் மேலே கண்ட கவிதையும் ஒன்று. பாரதியின் பாடல்கள் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது உண்டு. சிலர் சின்னஞ் சிறு கிளியை அழைத்து மேனி சிலிர்ப்பார்கள். சிலர் ஆசை முகம் மறந்து தவிப்பார்கள். மேலே சொன்ன பாடலை யாரும் பாடி நான் கேட்டு அறியேன்.

சமீபத்தில் தஞ்சாவூர் கல்யாணராமன் என்ற கர்நாடக இசைப் பாடகரின் சங்கீதத்தைக் கேட்டேன். யாரும் பாடாத அரிய ராகங்களில் பாடியிருப்பதை அறிந்தேன். இத்தனை நாட்களாக இவரைக் கேட்காமல் போனதை எண்ணி வருந்தினேன். ஜி.என்.பி. யின் சீடர். குருவே இவரது நுட்பமான இசை அறிவைக் கண்டு வியந்திருக்கிறார். 

உண்மை அறிந்தவர் என்ற பாரதியின் பாடலைக் கல்யாணராமன் அவர்கள் பாடிய விதத்தைக் கேளுங்கள்.







Comments

  1. 'Kanda Naal Mudhalai' by TKS is my favorite. Came to know about TKS from one of the interviews - may be with Sanjay Subramanian. YouTube has been a big source for old masters and songs - look for channel of one 'Raju Ashokan' - he has a good collection.
    -Cheenu

    ReplyDelete
    Replies
    1. Ok I shall look for Raju Ashokan.
      I have heard Sudha singing Kanda nal mudhal. TK's rendition is different

      Delete
  2. இவருடைய பாட்டு கேட்டேன். ரசித்தேன். சஞ்சய் சுப்ரமணியன் கூட இவரைப்பற்றி on the note ல் சொன்ன ஞாபகம். பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...