தீபாவளி என்றால் வழக்கமான கொண்டாட்டம் தவிர பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருவது பெரும் கொண்டாட்டம். புது ரிலீஸ் படத்தைத் தீபாவளி அன்றே பார்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் வயதில் மூத்தவர்கள்.இளைஞர்கள். அதாவது வேலை பார்ப்பவர்கள். கல்லூரியில் படிக்கின்றவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு புரளும் வாய்ப்பு பெற்றவர்கள். எல்லோரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள். அம்மாக்களுக்கு நிறைய வேலை இருக்கும். வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை வேளையில் சிறு பொழுது மட்டுமே புத்தாடை அணிவார்கள். சிறுவர்கள் நாள் பூராவும் புத்தாடையுடன் திரிவோம்.
இன்று மூன்று தெய்வங்கள் என்ற நிரைப்படத்தில் வரும் தாயெனும் செல்வங்கள் என்ற பாட்டு ஞாபகம் வந்தது.
தீபாவளி கொண்டாட்டத்தை இசைக்கும் பாடல். சாதாரணமாக வீடும் உறவுகளும் கொண்டாடும் பண்டிகை. புத்தாடை இனிப்பு பட்டாசு என்று. இந்தப் பாடலில் சொந்தமில்லாமல் வந்த யாரோ மூன்று பேர் சொந்தமாக ஆகித் தீபாவளி கொண்டாடும் காட்சி. பாடலின் இறுதியில் வரும் வரிகள் இப்படி அமைந்து இருக்கும்.
எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்
இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்
தாயாக மகனாக உறவாடலாம்
தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்
சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்
பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்
எல்லோரும் வாழும் நிலை வரட்டும்
இதைக் கேட்டதும் கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் என்ற சிறுகதை ஞாபகம் வந்தது. அற்புதமான கதை.
ஒரு ஏழ்மையான குடும்பம். தீபாவளிக்கு முந்தைய நாள். அப்பா வெளியூருக்குத் துக்கம் விசாரிக்கப் போயிருக்கிறார்.
அம்மாவையும் குழந்தைகளையும் தீபாவளி கொண்டாடச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அம்மா ஜாதிக்காய் பெட்டியைத் திறந்து காண்பிக்கிறாள். புதிய உடைகள். செல்லையா, தம்பையாவுக்கு கால் சட்டை பனியன்கள். மங்கம்மாவுக்குப் பாவாடை சட்டை. அப்பாவுக்குத் துண்டு மட்டும். அம்மாவுக்கு..? அதுதான் ஏற்கனவே இரண்டு சீலை இருக்கிறதே? போதாதா?
பிள்ளைகள் புதுத் துணியை தொட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். இரவு உணவை முடித்துவிட்டு வெளியே பார்க்கும் பொழுது ஒரு சிறுவன் எதிர் வீட்டு வாசலில் எச்சில் இலையை வழித்துத் தின்பதைப் பார்க்கிறார்கள். மழை வேறு பெய்கிறது. செல்லையா தம்பையா சகோதரர்கள். அவனை போ போ என்று விரட்டும் போது அவர்களுடைய அம்மா கடிந்து கொள்கிறாள். யார் பெத்த பிள்ளையோ என்று மனம் கனிகிறாள். ராஜா என்ற பெயர் கொண்ட சிறுவனை உள்ளே அழைக்கிறாள். மூன்று பேரும் தலை துவட்ட துணி தருகிறாள். அம்மா அப்பா இல்லாத பையன் என்று தெரிய வருகிறது. அன்று இரவு அவர்களோடு உறங்குகிறான். மறுநாள் எல்லோரும் எண்ணெய் தேய்த்து முழுகுகிறார்கள். அம்மா அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்துக் குளித்து விடுகிறாள். மற்ற எல்லோரும் புதுத் துணி உடுத்துகிறார்கள். ராஜாவுக்கு…. அம்மாவின் மனம் வருந்துகிறது. உடனே மங்கம்மா அப்பாவின் துண்டைத் தரலாமே என்று சொல்கிறாள். அம்மா வெடித்து அழுகிறாள். ராஜாவுக்கு அணிந்து கொள்ளத் துண்டு தருகிறாள்.
அம்மா நினைப்பதை அழகிரிசாமி இப்படி எழுதுகிறார்.
“யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்."
மனம் இருந்தால் யாரையும் உறவாக்கிக் கொள்ளலாம். அவரோடு பண்டிகையும் கொண்டாடலாம் இல்லையா?
Vaadiya payirai kandapodhellaam vaadina Vallalar pola...
ReplyDeleteNandini udane padithuvittergale..
Deleteபடித்திருக்கிறேன் இந்தக் கதை. தீபாவளி அன்று சினிமா எல்லாம் அண்ணாக்களுக்குத்தான்.🙂🙂
ReplyDeleteகு ப ராஜகோபாலன் சிறுகதைகள் படிச்சிருக்கியா? நல்லாருக்கும்.
ReplyDeleteபடித்திருக்கிறேன்
Deleteசரியான பதிவு. 👌 அருமை.
ReplyDeleteநன்றி மதி
Deleteபாடல் கேட்டேன். கதையும் படித்தேன். என்ன ஒரு comparison நல்ல பதிவு. பழைய காலங்களை நினைவூட்டுகின்றன. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி படித்துவிட்டு எழுதியதற்கு
Delete