Skip to main content

சாமத்தில் பூத்த மல்லி

 


ஜெயச்சந்திரன் குரலில் ஒரு மென்மை இருக்கும். குழைத்து வைத்த சந்தனம் போல. அவருக்குப் பாடக் கிடைத்த பாடல்கள் எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. பாடலின் தன்மையைப் புரிந்து கொண்டு உணர்ச்சி கலந்து பாடக் கூடியவர். அதில் கொஞ்சம் கூட மிகை இருக்காது. 


மணிப்பயல் என்று ஒரு திரைப்படம். அதில் ஒரு பாடல் தங்கச் சிமிழ் போல் இதழோ என்று. நான் அனேகமாக அப்போது பள்ளி இறுதி வகுப்பில் இருந்தேன். முதன் முதலாகச ஜெயச்சந்நிரனின் குரலைக் கேட்டேன். கிறங்கிப் போனேன். பல முறை வானொலிப் பெட்டியில் கேட்டிருக்கிறேன்.


பின்பு அலைகள் என்று ஒரு படம். ஸ்ரீதர் இயக்கியது. அதில் வரும் பொன்னென்ன பூவென்ன கண்ணே என்று ஒரு பாடல். கேட்டவுடன் பிடித்துப் போயிற்று. ஜெயச்சந்திரன் என்ற பாடகரோடு அவர் குரலையும் மனம் அடையாளம் கொள்ளத் துவங்கியது.


அதற்குப் பிறகு எத்தனை எத்தனை பாடல்கள். அப்பாவுக்குப் பிடித்த சினிமாப் பாடல்கள் மிகச் சிலவே. வியப்பு என்னவென்றால் அதில் இரண்டு பாடல்கள் ஜெயச்சந்திரன் பாடியது. ஒன்று வசந்த காலங்கள் இசைந்து பாடுங்கள். பிறிதொன்று தாலாட்டுதே வானம்.


ஏக்கம், தனிமை,காதல், இரக்கம் என்று எல்லா உணர்வுகளும் இவர் குரல் இயல்பாகத் தாங்கி வந்திருக்கிறது.


ஜெயச்சந்திரன் பாடல்களைப் பற்றி சேகர் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தான். சாமத்தில் பூத்த மல்லி என்று ஒரு பாடலை நினைவு படுத்தினான்.


மெய் தான். ஜெயச்சந்திரன் குரல் அப்படித்தான். மேலும் சந்திரனின் தண்மை.











Comments

  1. Spb, yesudoss கலந்த குரல். மாஞ்சோலைக் கிளிதானோ, சித்திரச் செவ்வானம்

    ReplyDelete
    Replies
    1. முன்னவர்களின் குரலைக் கேட்டு மனம் அப்படி நினைக்கும். இது வேறு. இது வேறு கோயில் இது வேறு பூஜை என்று ஜெயச்சந்திரன் பாடிய வரியைத் தான் சொல்ல வேண்டும்

      Delete
  2. முதல் பாடல் கேட்டேன். நல்ல குரல். ரசித்துக் கேட்டேன். சரியான சமயத்தில் நினைவு கூர்ந்து நல்ல பதிவு

    ReplyDelete
  3. There can't be a better tribute and homage to one of the finest singers of our times. His songs never get aged and are immortal. There were times when I lost settings for believing it to be of Yesudas'. I would confess, his voice is still refined and mellifluous comparing to that of my all time favourite Yesudas.

    ReplyDelete
  4. சரியான நினைவஞ்சலிப் பதிவு. 👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...