Skip to main content

மறைந்து போன விளக்கு



 காந்தியின் வாழ்க்கையை முடித்து வைத்தது மூன்று துப்பாக்கிக் குண்டுகள். பிர்லா மாளிகையில் அவர் உடல் கிடத்தப்பட்டது. கிடத்திய உடல் மேல் அவர் குளிருக்குப் போர்த்தியிருந்த சால்வையை மெல்ல உருவியபோது நழுவி விழுந்தது ஒரு குண்டு. இன்னொன்று அவரது சடலம் முழுதும் எரிந்து சாம்பலைத் திரட்டும் போது கிடைத்தது.


நேரு வானொலியில் உரை நிகழ்த்தினார். எந்த விதத் தயாரிப்பும் இன்றி பொங்கி வரும் உணர்ச்சியில் அவர் செய்த உரை அது. கண்ணீரைக் கட்டுப்படுத்தியபடி உணர்ச்சியில் குரல் நடுங்க அவர் செய்த உரை.


நமது வாழ்வில் இருந்த விளக்கு மறைந்து விட்டது. எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பாபு என்று நாம் அழைக்கும் நமது அன்புத் தலைவர், தேசத் தந்தை, இன்று நம்மிடையே இல்லை. ஒரு வேளை நான் அப்படிச் சொல்வது தவறாக இருக்கக் கூடும். நாம் அவரை இத்தனை காலம் பார்த்துக் கொண்டிருந்தது போல இனிக் காண முடியாது. ஆலோசனைக்காகவும் ஆறுதல் மொழிக்காகவும் அவரைத் தேடி ஓட முடியாது. அது ஒரு பலத்த அடி. எனக்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கும் தான். வன்மையாக விழுந்த இந்த அடியை எனது வார்த்தைகளோ மற்ற எவருடைய வார்த்தைகளோ மென்மைப் படுத்திவிட முடியாது.

விளக்கு மறைந்து போனது என்று சொன்னேன். என்றாலும் நான் சொன்னது தவறு தான். இந்த நாட்டிலே ஒளி வீசிய அந்த விளக்கு ஏதோ சாதாரணமான விளக்கு அல்ல. இத்தனை ஆண்டுகள் ஒளி வீசிய அந்த விளக்கு இன்னும் பல ஆண்டுகள் இந்த நாட்டிலே ஒளியேற்றும். இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் இந்த நாட்டிலும் உலகத்திலும் அந்த ஒளி காணப்படும். கணக்கில்லாத இதயங்களுக்கு அது ஆறுதல் வழங்கியபடி இருக்கும். அந்த ஒளி ஏதோ நமதருகே கடந்து போனதான ஒன்றைக் குறிக்கவில்லை. அதற்கும் மேலாக வாழும் நிரந்தரமான உண்மையை, சரியான பாதையை, தவறுகளிலிருந்து நம்மை விலக்கி இந்தப் புராதனமான தேசத்தை விடுதலையை நோக்கி இட்டுச் செல்வதைக் குறிப்பதாக இருந்தது.

அவர் செய்ய வேண்டியது எத்தனையோ இருந்த போது இப்படி எல்லாம் நடந்து விட்டது. அவர் தேவையற்றவர் என்றோ அவரது பணிகள் முடிவுற்றது என்றோ நாம் ஒருபோதும் நினைக்க முடியாது. அதிலும் குறிப்பாக இத்தனை சிரமங்களை நாம் சந்திக்கும் இந்நேரத்தில் அவர் நம்மிடையே இல்லை என்பது தாங்க முடியாத பயங்கர அடிதான்.

ஒரு மூடன் அவரது உயிருக்கு முடிவு கட்டிவிட்டான். இப்படிச் செய்தவனை மூடன் என்றுதான் என்னால் சொல்ல முடியும். ஆனாலும் சில மாதங்கள் வருடங்களாக இந்த நாட்டில் ஒரு விஷம் பரவி வருகிறது அது மக்களின் மனதில் சில விளைவுகளை ஏற்படுத்தித் தான் இருக்கிறது…..

இப்படித் தொடர்ந்தது நேருவின் பேச்சு. உணர்வு பூர்வமான ஆனால் பொறுப்பு  மிக்க பேச்சாக அது அமைந்திருந்தது.

காந்திக்கு முடிவு நேர்ந்தது. ஒவ்வொரு முடிவும் வேறு ஏதோ ஒன்றின் துவக்கமாகத் தானே ஆகிறது?


Comments

  1. Nice Translation ! Gandhi had a strong connection with Madurai - made the momentous sartorial choice there. My very first school excursion trip was to the Gandhi Museum from Meenakshi Vidyasala in my second standard. Recollecting Sarvodaya Ilakya Pannai, Khadi Kraft shop for Deepavali kurta.

    ReplyDelete
    Replies
    1. Nice remembrance about Gandhi's Madurai connection. My first visit to Gandhi Museum happened when I was in 6th standard. All the students of my class spent one day in Gandhi Museum.

      Delete
  2. அருமை சந்தானம். He was selectively quoted until sometime back and now even that has stopped. Our leaders feel guilty before his towering personality. I had a chance to read his சத்திய சோதனை recently - and with age we tend to more understand what is shared over there.

    ReplyDelete
    Replies
    1. His life was his message. The message was understood by few. Misinterpreted by many.
      Hate was not what he taught.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...