Skip to main content

ஒன்றும் புதிதல்ல

 



மரணம் தழுவுகின்ற இறுதிக் கணம். நேருவின் படுக்கைக்கு அருகே ஒரு கவிதைப் புத்தகம் இருந்தது. அது ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞனின் கவிதைத் தொகுப்பு. Stopping by the woods என்று ஒரு கவிதை. அதன் இறுதி வரிகள் நேருவால் அடிக்கோடு இடப்பட்டு இருந்தது. அந்த வரிகள்

The woods are lovely, dark and deep

But I have promises to keep 

And miles to go before I sleep,

And miles to go before I sleep

நேருவின் மனம் நுட்பமானது. அவருக்கு வாய்த்தது கவி மனம். இயற்கை சார்ந்த ரசனை, தத்துவ விசாரம், உலகளாவிய பார்வை இவை எல்லாம் அவருக்கு இருந்தது. அவர் நிறையப் படித்தார். படிப்பு அவரது எழுத்தைச் செழுமைப் படுத்தியது. நிறைய எழுதினார். சிறை வாழ்க்கை அதற்கு உதவியது. காச நோயாளியான தனது மனைவிக்கு Pearl S Buck எழுதிய The Good Earth என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டும் மனிதராக அவர் இருந்தார். 

இன்று ராபர்ட் ஃப்ராஸ்டின் சில கவிதைகள் படிக்கக் கிடைத்தது. ஆங்கில மூலத்தையும் தமிழில் அதைச் செய்ததையும் கீழே தந்திருக்கிறேன்.


Nothing new


One moment when the dust to-day

Against my face was turned to spray,

I dreamed the winter dream again

I dreamed when I was young at play,

Yet strangely not more sad than then—

Nothing new—

Though I am further upon my way

The same dream again.

—Robert Frost (1874-1963)


ஓன்றும் புதிதல்ல 


ஒரு கணம் இன்று முகத்தில் தூசு மோதி ஒரு துவலை போல மாறிய போது

குளிர்காலக் கனவினை நான் மறுபடியும் கண்டேன்

இளமையிலே விளையாட்டில் கண்டிருந்த அதே கனவு

வினோதம்

அப்போது இருந்ததை விட ஒன்றும் அதிகம் துயரம் இல்லை 

ஒன்றும் புதிது அல்ல

அதே வழி நான் செல்வது 

அதே கனவு பின்னும்


Dust of snow


The way that crow

Shook down on me

The dust of snow

From a hemlock tree

Has given my heart

A change of mood

And saved some part

Of a day I had rued.


Robert Frost


பனித் துகள்


ஹெம்லாக் மரத்திலிருந்த பனித் துகளை

அந்தக் காகம் என் மேல் உதறிய விதம்

என் மனநிலையை மாற்றியது

நான் விசனம் கொண்ட தினத்தின்

ஒரு பகுதியைக் காப்பாற்றித் தந்தது




Fire and Ice


Some say the world will end in fire,

Some say in ice.

From what I’ve tasted of desire

I hold with those who favor fire.

But if it had to perish twice,

I think I know enough of hate

To say that for destruction ice

Is also great

And would suffice.


நெருப்பும் பனிக்கட்டியும் 


சிலர் சொல்கிறார்கள்

இந்த உலகம் நெருப்பினால் முடிந்து போகும் என்று

சிலர் சொல்கிறார்கள் அது பனிக்கட்டியால் என்று

நான் ஆசையை ருசி 

பார்த்திருக்கிறேன் 

எனவேதான் நெருப்பை ஆதரிப்பவர் பக்கம் இருக்கிறேன்

ஆனால் இரண்டு முறை மடிந்து போக எனக்கு வாய்த்தால் 

வெறுப்பைப் பற்றிப் போதுமான அளவு தெரிந்திருந்தால்

இந்த உலகத்தை அழிப்பதற்கு பனிக்கட்டியே சிறந்தது என்று சொன்னால்..

அதுவும் கூட சரி தான்.


தமிழில்

தி சந்தானம்



Comments

  1. உன் தந்தை சொன்னதாக எனக்கு ஞாபகம். woods are lively
    மட்டுமல்ல. எனது 11 ம். வகுப்பு ஆங்கில மனப்பாடலும் கூட. நினைவூட்டலுக்கு் நன்றி தோழா். பண்டிட் இறப்பு குறிப்பில் இடம் பெற்றிருந்த. பாரா். நன்றி. நரசிம்மன்

    ReplyDelete
    Replies
    1. முழுப் பாடலும் மனப்பாடப்பகுதியாக உனக்கு வந்திருக்கக் கூடும். அப்பா உனக்கு இந்த வரிகளைச் சொன்னாரா? மகிழ்ச்சி நரசிம்மா

      Delete
  2. Robert Frost கவிதைகள் மற்றும் மொழி பெயர்ப்பு அருமையாக இருந்தது. யாராவது எடுத்துச் சொன்னால்தான் இது போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் சந்தானத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது.
    அதிலும் பனித்துகள் கவிதை தமிழ் ஒரிஜினல்.
    தேர்ந்தெடுத்த கவிதைகள் super.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...