Skip to main content

கண்கள் தேடும் முகம்

 தினம் தினம் நினைவுகள் எதை எதையோ மீட்டிப போகும். சிறு வயதில் ரேடியோப் பெட்டியில் ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். பாடல் வரிகள் எல்லாம் அத்தனை புரியாது. ஆனால் அந்த ராகம் தரும் குழைவு மனதில் வெகு காலம் நின்றது. வெண்ணெய் முழுதுமாக காய்ந்து நெய்யாகும் போது எழுகின்ற மணத்தைப் போல.


அந்தப் பாடலின் முதல் வரிகள்..

எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே 

கண்ணிரண்டும் ஓர் முகத்தையே தேடுதே

இந்த இரண்டு வரிகளைத் தாண்டி பாடல் வரிகளை மனம் அறிந்ததில்லை. சில நாட்கள் முன்பு தான் இந்தப் பாடல் வரிகளை முழுதும் கவனித்துக் கேட்டேன்.


தேனேந்தும் மலராகி 

வானேந்தும் நிலவாகி…..

சிந்தை கவர்ந்திடுதே 

செங்கதிர் சுடர் போலே

என் கரம் நீண்டிருந்தால்…


இப்படி எல்லாம் நெடுகிலும் உவமைகள். ஆனால் எனக்கு ஆச்சரியம் இரண்டாவது சரணத்தில் காத்திருந்தது. கனவில் கண்ட காட்சியில் மையல் தீருமா? நுரை தின்று பசி தீருமா? மலரின் நிழல் மணம் வீசுமா? முத்து மாலையின் நிழல் விலை போகுமா?

இப்படி எல்லாம் கவிஞர் அடுக்கிக் கொண்டே போகிறார்.


பின்பு வரும் வரிகளைப் பாருங்கள்.


நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே

நேச முகம் இரண்டும் நெருங்குமா?


மனதில் இதை காட்சிப் படுத்திப் பாருங்கள். சின்னச் சின்னதாய் இழைகள் பின்னிப் பின்னி ஒன்றுடன் ஒன்று நெருங்குவதை. அற்புதம்.


பாடல் வரிகளை எழுதியவர். சுரதா என்ற சுப்புரத்தின தாசன். இவரை உவமைக் கவிஞர் என்று குறிப்பிடுவார்கள்.




பாடலைக் கேட்கலாம்.



Comments

  1. முதல் முறையாகக் கேட்கிறேன். அருமை. பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பாட்டு கேட்ட நினைவிருக்கிறது. ஆனால் இவ்வளவு அறிமுகத்தோடு கேட்டதில்லை. பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  3. நல்ல பாட்டு semi classic. எனக்கு TA மோதி பாடிய, சபாஷ் மீனா பாடல் நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. காணா இன்பம் கனிந்த தேனோ தானே? கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணோர் செய்யும் வேடிக்கையோ என்றெல்லாம் வரிகள் வரும் என்று ஞாபகம்

      Delete
  4. விண்ணில் வாண வேடிக்கையோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...