Skip to main content

அலர் தூற்றுவது

 அலர் என்று ஒரு தமிழ்ச் சொல் உண்டு. அலர் என்பது மலரைக் குறிக்கும். பூ மலருவதை யார் அறிவார்? காதல் மலரும் கணம் முதலில் சம்பந்தப் பட்ட இருவருக்கு மட்டுமே தெரியும். பூ மலர்வதைக் காண முடியாது. ஆனால் வாசம் வந்தவுடன் ஊரார் அறிந்து கொள்வார். அது போலவே காதலும். இருவரின் காதலையும் அறிந்தவுடன் தமக்குள்ளே ரகசியமாகப் பேசிக் கொள்வர். இதனை அம்பல் என்று சொல்வார்கள். இதையே ஊரார் வெளிப்படையாகப் பேசத் துவங்குவதை அலர் தூற்றுதல் என்று குறிப்பிடுவார்கள்.


திருக்குறளில் அலர் அறிவுறுத்தல் என்று ஒரு அதிகாரமே உள்ளது.


அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.


ஊர் பழித்தும் என் உயிர் நீங்கவில்லை. அது நான் செய்த நல்வினைப் பயன் என்று தலைவி கூறுவதாக இருக்கிறது.


நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம்.


கண்டதுவே கொண்டெல்லாரும் கூடிக்

கார்க்கடல் வண்ணனோடென் திறத்துக்

கொண்டு அலர்தூற்றிற்றது முதலாக் 

கொண்டவென் காதல் உரைக்கில் தோழீ 

மண்தினி ஞாலமும் ஏழ்கடலும்

நீள்விசும்பும் கழியப் பெரிதால் 

தெண்திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த

தென்திருப்பேரையில் சேர்வன் சென்றே 


கடல் போன்ற நிறம் கொண்ட கண்ணன் மேல் காதல் கொண்டு விட்டேன். இதை அறிந்த எல்லோரும் கூடி அலர் தூற்றுகின்றனர். தூற்றிவிட்டுப் போகட்டும். இந்த உலகம், ஏழ் கடல், மேலே விரிகின்ற ஆகாயம் இவை யாவற்றையும் விடப் பெரியது என் காதல். அலைகள் சூழ அவன் அமர்ந்திருக்கும் தென்திருப்பேரைக்கு நான் போகத்தான் செய்வேன்.


அன்னையர் கடிந்து கொண்டாலும் ஊரார் தூற்றினாலும் அவன் மேல் கொண்ட காதல் மாறாது. இப்படி உறுதிபடத் தலைவி கூறுவதாகப் பாசுரம் அமைந்திருக்கிறது.


பழந்தமிழ் இலக்கியத்திலே ஒரு பாடல் உண்டு. தலைவனுடன் தலைவி தனி வழியே போய் விட்டாள். தந்தையும் தாயாரும் உற்றாரும் நிற்கத் தனி வழி போய்விட்டாள். இந்தப் பழி வந்த பின்னால் என்ன செய்வது? தோழி இதைத் தலைவியின் தாயிடம் சென்று உரைக்கின்றாள். சொல்லும் போதே கண்ணீர் பெருகி வழிகிறது. இதற்கு தாய் பதில் கூறுவது போலப் பாடல் அமைந்திருக்கிறது.


தாயென்செய்தாள் என்று தள்ளி என்பாவை தன்பால் மயங்க

மாயம் செய்தான் ஒரு வள்ளல் பின்னே

அழல் வெஞ்சரத்துப் 

போயென் செய்தாளென்று அறிகிலேன் 

ஒன்றும் பொறியிலியேன்

நீயென் செய்வாள் மகளே கண்கள்

நீர்மல்க நின்று நின்றே


நான் என்ன தவறு இழைத்தேன்? என் மகள் என்னை விட்டு நீங்கி விட்டாள். அவன் என்ன மாயம் செய்து விட்டானோ? அவனோடு போய்விட்டாள். என்ன ஆனாளோ? எப்படி இருக்கின்றாளோ? நீ என்ன செய்வாய் பெண்ணே? ஏன் கண்ணீர் விடுகிறாய்?


எளிய வரிகள். எத்தனை நுட்பமாக உணர்வுகளைச் சொல்கிறது!


Comments

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...