Skip to main content

ஒரு குள்ள நரியின் தினம்

 To be honest, I never intended to be a writer at all. Long periods of solitude were first a circumstance, then a preference and finally a necessity.


Frederick Forsyth in his book The Outsider


1978ம் வருடம் ஒரு தீபாவளி நன்னாளில் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். அது The Day of the Jackal. பிரெஞ்சு அதிபர் டி கோல். அவரைக் கொல்ல முடிவு செய்கிறார்கள். கூலிக்கு ஒருவனை நியமிக்கிறார்கள். Hired assassin. இதற்காக அவன் மாறி மாறி வேடம் அணிந்து கொள்கிறான். போலி அடையாள அட்டை போலி பாஸ்போர்ட் எல்லாம் தயாரித்து பலர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பிரான்ஸ் வருகிறான். போரில் மடிந்த வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி. 

கால் இழந்த முன்னாள் ராணுவ வீரன் போல வேடமிட்டு வருகிறான் கொலையாளி. ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் டெலஸ்கோப் பொருத்திய மெளனத் துப்பாக்கியோடு காத்திருக்கிறான். அதிபர் டி கோல் தன் கையால் ஒவ்வொருவருக்கும மெடல் குத்தி விடுகிறார். டி கோல் கிட்டத்தட்ட ஏழடி உயரம். உயரமான கட்டிடத்தின் மேலிருந்து கொலையாளி அதிபரின் நெற்றிப் பொட்டைக் குறி பார்த்தபடி இருப்பான். துப்பாக்கியின் விசையை அழுத்துவான். சரியாக அதே சமயம் உயரம் குறைந்த ஒருவருக்கு மெடலைக் குத்திவிட அதிபர் டி கோல் குனிந்து விடுவார். குண்டு அவர் தலைக்கு மேல் செல்ல உயிர் தப்பி விடுவார்.



The Day of the Jackal என்ற பெயரில் Frederick Forsyth எழுதிய நாவல்தான் திரைப்படம் ஆனது. கல்லூரி நாட்களில் படித்திருந்தேன். விறுவிறுப்பான கதை. ஜாகுவார் என்ற காரைப் பற்றி இதைப் படித்த போது தான் தெரிந்தது. அதிபர் டி கோலின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொள்ள ஒரு மந்திரி இருப்பார். அமைச்சரவைக் கூட்டங்களில் அவருக்குச் சரியாகப் பேச வராது. ஆனால் நல்ல திறமைசாலி. அவருடைய யோசனைகளை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். கேலி பேசுவார்கள். இதற்கெல்லாம் அவர் கவலைப்பட மாட்டார். தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்துவார். ஒவ்வொரு முறையும் கொலையாளியை நெருங்கும் போது அவன் ஒரு சின்ன இழையில் தப்பித்துக் கொண்டே இருப்பான். இறுதியில் இவருடைய சாதுரியமே வெல்லும். கதையைப் படிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாக இந்தப் பகுதிகள் இருக்கும்.


ஒரு சமயம் தொடர்ந்து Frederick Forsyth கதைகளைப் படிக்க நேர்ந்தது. The Odessa File, The Dogs of War என்றெல்லாம். இவை இரண்டுமே திரைப்படமாகி வெற்றி பெற்றன. The Devil's alternative என்று கூட ஒரு கதை படித்த ஞாபகம் இருக்கிறது.

இவை எல்லாமே கல்லூரி நாட்களில் தான்.



வருடங்கள் சென்ற பின் No Comebacks என்று Frederick Forsyth எழுதிய ஒரு புத்தகம் படித்தேன். அது நாவல் அன்று. சிறுகதைகளின் தொகுப்பு. கதைகள் எல்லாமும் thriller வகைதான். இதை எனக்குப் படிக்கத் தந்த அலுவலக நண்பர் இப்போது இல்லை. புத்தகத்தை எழுதியவரும் சமீபத்தில் மறைந்து விட்டார்.


சாகசங்கள் நிறைந்த வாழ்க்கை எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. இளமை சாகசங்களைத் தேடுகிறது. அது இது போன்ற நாவல்களைப் படிப்பதிலும் திரைப்படங்களைப் காண்பதிலும் நிறைவு கொள்கிறது. யாவற்றிலும் ஒரு ஆழமான உளவியல் இருக்கிறது.



Comments

  1. True..we tend to identify ourselves with our favorite heroic actions whike reading such stories get inspired fir some time thereafter. Same way, we live in our memories, recalling various moments in our lives, true life stories. We read our stories; so what are we now? Our life is bundle of stories.

    ReplyDelete
  2. எப்பவும் போல அழகாக எழுதியிருக்காய். நான் படிக்கவும் இல்லை படமும் பர்த்ததில்லை. நாவலை வாங்கி படிக்கத் தூண்டுகிறது உன் பதிவு. 78 தீபாவளி, நீங்க பி 13, நாங்க தேன்மொழி. ஒரு க்ரூப் இளமை ஊஞ்சலாடுகிறது போன நினைவு. நான்லாம் அரை டிக்கெட்.

    ReplyDelete
  3. Odessa file and The Day of the Jackal படம் பார்த்திருக்கிறேன் thriller படங்கள் பார்ப்பதில் ஓர் ஆர்வம் இருந்தது. பழைய நினைவுகள். பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  4. When we were in Madurai, I didn't watch the movie but read the novel. Probably my first action packed novel in English. English movies I remember watching i. Madurai at that time were Force 10 from Navrone, Mackenna's Gold, The Spy Who Loved Me, Gods Must be Crazy - mainly Cinipriya/Minipriya and Regal Theatre.

    ReplyDelete
  5. Where Eagles Dare, Crazy boys of the game etc

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...