Skip to main content

நோக்கி நோக்கி

 குறுந்தொகையில் ஒரு பாடல். வெள்ளிவீதியார் இயற்றியது. செவிலித் தாய் பாடுவதாக அமைந்திருக்கிறது.


காலே பரிதப் பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாளிழந் தனவே

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.


பொருளைப் பார்க்கலாம்.

தலைவி தலைவனுடன் சென்று விட்டாள். 

அவளைத் தேடி ஓடி ஓடி கால்கள் சலித்துப் போயின. 

அவள் சென்ற திசையைப் பார்த்துப் பார்த்து கண்களில் ஒளி குன்றியது. இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர்.

அகன்ற வானில் உள்ள நட்சத்திரங்களை விட அளவில் அதிகமானவர்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?

செவிலித் தாய்  இப்படித் தனியே நின்று புலம்புகிறாள்


நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்று.


நோக்கி நோக்கி உன்னைக் காண்பன் 

நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய 

ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும் 

நீக்கம் அன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே


நோக்கி நோக்கி உன்னைக் காண்பன் என்ற சொல்லில் எத்தனை வேட்கை. மீண்டும் மீண்டும் காண வேண்டுமென்ற மீளாத வேட்கை. உயிரின் உள்ளேயும் உடம்பின் உள்ளேயும் வெளியில் எங்கும் நீக்கம் இன்றி நிற்கும் பெருமான் மேல் தீராத வேட்கை.

எத்தனை பரவசம்!


ஒரு பழைய திரைப்படப் பாடலைக் கேட்டேன். எத்தனை இதம்!

அந்தப் பாடல் பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் என்று தொடங்குகிறது.


காதல் வயப்பட்ட மனதில் தான் எத்தனை பரவசம்!


பார்வை இழந்து,.. வார்த்தை இழந்து ..நெஞ்சம் இழந்து … தன்னை மறந்து.. ஆவி இழந்து… பெருமை இழந்து ….என்ன என்னவெல்லாம் நடந்து விடுகிறது


பாடலைக் கேளுங்கள்.









Comments

  1. 👍 Expectation என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் 'எதிர்பார்த்தல்' - எதிர் பார்த்தலின் களைப்பு கண்களைதான் பாதிக்கிறது. வாலியின் சில பாடல் வரிகளில் கூட இதைப் பார்க்கலாம்:
    'பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த காட்சி இன்று காணக் கிடைக்க, 'பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட'.

    ReplyDelete
  2. I love how you connect your thoughts and present them so coherently. Makes the piece engaging.

    ReplyDelete
  3. பாட்டு நன்றாக இருந்தது. குறுந்தொகை திருவாய்மொழி சினிமாப்பாடல் தொடர்பு படுத்தியது அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...