Skip to main content

நெஞ்சுக்கு நிம்மதி

 நான் ஹிந்தி மொழியைக் கற்றது பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழியாகத்தான். எங்கே உருது கலந்திருக்கும் என்று நான் அறிந்ததில்லை. ஆறு வருடங்கள் வட இந்தியாவில் இருந்திருக்கிறேன். நான் ஹிந்தி பேசுவது திரைப்படத்தில் பேசுவது போல இருக்கிறது என்று அங்கு உள்ளவர்கள் சொல்வார்கள். எங்கு சென்றாலும் நான் நட்பு பாராட்டுவது கடைநிலை ஊழியர்களோடு. அவர்களுடனான நட்பு எனக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்திருக்கிறது.

ஒருமுறை கடவுளைக் குறிப்பதற்கு குதா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். ஜெனரேட்டரை இயக்கும் பையன் என்னைக் கடிந்து கொண்டான். குதா என்று சொல்லாதீர்கள். பகவான் என்று சொல்லுங்கள் என்று சொன்னான். எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. குதா என்பது உருதுச் சொல். கடுமைக்குக் காரணம் அது தான்.


எழுபது காலக் கட்டங்களில் பெரிதும் விரும்பிக் கேட்டது ஹிந்தித் திரைப்படப் பாடல்கள் தான். அதிலும் ஆர் டி பர்மன் இசையில் கிஷோர் குமார் பாடலைக் கேட்டால் மனம் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடும். இசையும் குரலும் மனதில் உணர்ச்சிகளை மீட்டி விடும். இளமை தரும் மனவெழுச்சி எல்லாம் வார்த்தைகள் காட்டி விடுமா?


குறிப்பாக ஒரு பாடல். ஓ மேரே தில் கே செய்ன் என்று துவங்கும். பாடல் துவக்கத்தில் ஓரு இதமான ஹம்மிங். நெஞ்சில் பரபரவென்று ஒரு பரவசம் ஓட ஆரம்பிக்கும். மெல்ல மெல்லப் பாடல் நம்மை உள்ளே இழுக்கும்.


கேளுங்களேன். 




பாடல் வரிகள் பொருளறிவதற்காகக் கீழே தமிழில் தந்திருக்கிறேன். உருது கலக்காமல் ஹிந்தி வார்த்தைகள் இல்லை. உருது சேராத காதல் பாட்டில் உயிர் இல்லை. இந்தப் பாடலில் கூட உருது வார்த்தைகள் உண்டு. அர்மான், தரானா இப்படி எல்லாம். பாடலுக்கு அழகு சேர்க்கும் அவை.


எனது நெஞ்சுக்கு நிம்மதியே

நீயே நெஞ்சில் வர வேண்டும்

இப்படி நீயே வேண்டிக் கொள்


உனது நிழலை நீயே கண்டு

ஏனோ நாணுகிறாய் 

எனது உயிரே எனது உலகே

முதல் படியிலேயே 

ஏன் அஞ்சுகிறாய் 

எனது நிலையை யோசித்தாயா?

அப்படி பெருமூச்சு விடாதே


உன்னை உன் பெயரை நான் அடைய வேண்டும்

இதுவே எனது கீதம் ஆகும்

தாழ்ந்த இமைகள் கீழே அல்லால்

ஏது எனக்கு உறைவிடம் ஆகும் 

உன்னை அல்லால் வேறொருவர் என் கண்ணில் பொருந்துவதில்லை 

இதயம் உன்னையே விரும்பும் போது

நான் என்ன செய்வேன் இப்போது


இடறிக் கீழே விழுந்தாலும்

சமாளித்து நானே எழுந்து விடுவேன் 

உன் கைகள் என்னைப் பற்றி விட்டாலோ

இந்த உலகத்தையே மாற்றி விடுவேன்

உலகின் நன்மை வேண்டித்தான் 

உந்தன் கைகளைக் கேட்கின்றேன்

முடிவு இப்போது உன் கையில்

எனது நெஞ்சுக்கு நிம்மதியே







Comments

  1. What I love most about the song is the gentle guitar strums and the soft background that keep the focus on Kishore’s voice. The shift between longing and reassurance comes through so beautifully. Nostalgic ride!

    ReplyDelete
  2. The fleeting sound of santoor is what intrigues me the most

    ReplyDelete
    Replies
    1. Now I'll have to listen to it again :) You should add the musical experience too in future posts.

      Delete
  3. I thought that would interfere with the individual listening experience

    ReplyDelete
  4. அருமையான பாட்டு. குரல் இசை பிரமாதம். பாட்டின் பொருள் பற்றி யோசித்ததில்லை. தற்போதுதான் பொருள் தெரிகிறது. ரசித்தேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...