Skip to main content

பனியின் வாசமும் கூந்தலின் ஈரமும்

 Moonlit Night


Tonight my wife must watch alone

the full moon over Fu-zhou;

I think sadly of my sons and daughters far away,

too young to understand this separation

or remember our life in Chang'an.

In fragrant mist, her flowing hair is damp;

In clear moonlight, her jade-white arms are cold.

When will we lean at the open casement together

while the moonlight dries our shining tears?


Du Fu



நிலவொளி இரவு


இன்று இரவு எனது மனைவி

தனியே முழு நிலவைக் காண்பாள் 

தூர தூரத்தில் இருக்கும் எனது மக்களை

நினைத்துக் கொள்கிறேன்

வயதில் சிறிய அவர்களுக்கு

இந்தப் பிரிவின் துயரம் புரியாது

சாங்கனில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை கூட நினைவில் இருக்காது

பனியின் வாசமும் விழுகின்ற அவள் கூந்தலின் ஈரமும்..

தெளிந்த நிலவில் தண்ணென்றிருக்கும்

வெண்ணிறக் கைகளும்..

நாங்கள் எப்போது இனி ஒன்றாக

திறந்த சன்னலின் மீது சாய்ந்து இருப்போம்

நிலவொளி எங்கள் ஒளிரும் கண்ணீர்த் துளிகளை உலரச் செய்யும் போது




சீனக் கவிஞர் டூ ஃபூவின் கவிதை சங்க காலக் கவிதை போல இருக்கிறது.

பள்ளிப் பருவத்தில் படித்த சத்திமுத்தப் புலவரின் பாடல் ஞாபகம் வந்தது.

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாரையைத் தூது விடும் பாடல். அங்கே சத்திமுத்தத்தில் மனைவி காத்திருக்கிறாள். மழையில் சுவர் நனைந்திருக்கிறது. பல்லியின் ஓசையைக் கூர்ந்து கவனித்தபடி இருக்கிறாள். ஏதாவது நல்ல சகுனம் வருகிறதா என்று.

அவளிடம் சென்று வறுமையிலும் குளிரிலும் தான் வாடுவதைக் கூறுக என்று நாரையைத் தூது விடுகிறார். அதுவும் தென்திசைக் குமரியாடி வட திசைக்கு செல்ல நேர்ந்தால் தனது நிலையைச் சொல்லச் சொல்கிறார். தங்களது ஊரில் உள்ள நீரோடையில் அந்த நாரை தனது துணையோடு தங்கிக் கொள்ளலாம் என்று தாராளமாக அனுமதியும் வழங்குகிறார்.


இலக்கியம் எப்போதும் பிரிவைப் பேசுகிறது. அது எந்த மொழியாக இருந்தாலும்.





Comments

  1. Can't write any comment but can remain choked in thoughts as a Can(bank)man, he being the Conman.

    ReplyDelete
  2. நட்சத்திரங்களை இரவு வானில் பார்த்தே பல வருடங்களாகிவிட்டது. மொட்டை மாடியும் இல்லை, மாடி இருந்தாலும் நகர வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் தெரிவதில்லை. நிலவும் நட்சத்திரங்களும் கவிதைகளில்தான் தெரிகிறது இப்போது :)
    -சீனு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...