Skip to main content

Posts

நாதஸ்வர ஓசை

  சில வருடங்களுக்கு முன்பு அலுவலக நண்பரின் வீட்டுத் திருமணத்திற்குப் சென்றிருந்தேன். சந்தடிகளுக்கு நடுவே நாதஸ்வரத்திலிருந்து ராகங்கள் பெருகி வழிந்து கொண்டிருந்தன. ஆனால் கேட்பார் யாரும் இல்லை. தாலி கட்டிய சில நேரத்தில் நாதசுரத்திலிருந்து பழைய சினிமாப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. எல்லாமே பொருள் பொதிந்த பாடல்கள். பூஜைக்கு வந்த மலரே வா.. என்ற பாடலை நாதசுரக்காரர் உற்சாகமாக வாசித்தார். வாசிக்க வாசிக்க வாசிக்க பாடல் வரிகள் மனதில் ஓடத் துவங்கியது. நானும் இன்னொரு நண்பரும் அருகில் சென்று அமர்ந்து கேட்டோம். வாசிப்பவர் பெரிதும் உற்சாகம் அடைந்தார்.  திருமணங்களில் நாதஸ்வரம் பெரிதாக முக்கியத்துவம் பெறுவதில்லை.  எங்கள் பகுதியில் இப்போது எல்லாம் கேரளத்திலிருந்து வந்து செண்டை மேளம் வாசிக்கிறார்கள். அது ஒரு தாள லயம். அது ஒரு ஓசை. எஸ்.ராமகிருஷ்ணன் "சஞ்சாரம்" என்று ஒரு நாவல் எழுதினார். அதற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அது நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியது. விருது கிடைத்த சமயம் எஸ்.ராமகிருஷ்ணன் இவ்வாறு சொன்னார். "நேற்று எல்லோரையும் சந்தித்த பின் அவர்களிடமிருந்து என்னைத் தனிமைப்பட...

ஒரு கடிதம்

  "Manchester,  June 21, 1865  Dear my heart, see, I am writing to you again. Do you know why? Because I am away from you and whenever I am away from you I feel even closer to you. You are in my mind all the time and I keep talking to you without any response from you, these are the distance and dear, they are very beautiful. While constantly staying together, we start to get so much into each other, in each other’s talk, in the habits, that it is not possible to see anything separately from it. Then small things, habits start taking big forms, irritations start filling up. But as soon as they go away, it all goes away in a moment, like any charisma, the distance brings up love, just like the sun and rain makes little plants. Oh my dear, these days the same charisma of love is happening to me. Your shadows surround me, my dreams are adorned with your scent. I know how these distances have cherished my love, it is decorated. "There are many women in this world, there are m...

நீ தொட்டால்...

  தாவரங்கள் நுணுக்கமான நரம்புக் கூட்டங்கள் அமையப் பெற்றவை. ஒளி,ஒலி,தொடுகை போன்ற புறத் தூண்டுதல்களுக்கு ஆட்படுபவை. தாவரங்கள் வலியை உணரும். எரித்தால்,ஒடித்தால்,வெட்டி எறிந்தால் மிகவும் வேதனைப் படும்.தாவரங்கள் பேசும். எப்படி? வேதிப் பொருட்களை சமிக்ஞையாக வெளிப்படுத்துவதன் மூலம். இந்த சமிக்ஞைகளை அருகில் இருக்கும் தாவரம் புரிந்து கொள்ளும்.  தாவரங்களால் கற்கவும் நினைவில் கொள்ளவும் முடியும். சில புறத் தூண்டுதல்களை அவை நினைவில் கொள்ளுமாறு கற்பிக்க முடியும்.  இப்படி எல்லாம் கண்டுபிடித்துச் சொன்னது ஜெகதீஷ் சந்திர போஸ்.  ஒரு நூறு ஆண்டுகளுக்கு மூன்பு. தான் கண்டு கொண்ட எதற்கும் அவர் காப்புரிமை பெறவில்லை. அதனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் கவலைப் படவும் இல்லை.  'கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார் ஜகதீச சந்த்ரவஸு' என்று இவரைப் பாரதி புகழ்வார். "அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம்'. என்ற பாரதியின் வசன கவிதை இங்கே பொருள் கொள்ளத் தக்கது. பல வருடங்களுக்கு முன்பு நண்பர் நரசிம்மனோடு திரூவனந்தபுரம் சென்றேன். இந்தப் பயணம் எப்படி என்றால் நெல்லை வரை பஜாஜ் ஸ்கூட்டரி...

உருகிடும் வேளையிலும்

  தாகம் என்று ஒரு திரைப்படம் 1974 ம் வருடம் வந்தது. மதுரையில சிந்தாமணி தியேட்டரில் ரிலீஸ் ஆனதாக ஞாபகம். முத்துராமன் மற்றும் நந்திதா போஸ் நடித்திருந்தனர். தமிழில் அது ஒரு சோதனை முயற்சி. மதுரை திரைப்பட ரசிகர்கள் அதை தங்களுக்கு ஏற்பட்ட பெரும் சோதனையாகக் கருதினர்.  விளைவு. படத்தை மூன்று நாட்களுக்கு முன்னாலேயே தூக்கி விட்டார்கள். முத்துராமன் பார்வையற்றவராக நடித்திருந்ததாக அறிந்தேன். எங்கள் கல்லூரி நூலகத்தில கணையாழி, தீபம் போன்ற பத்திரிக்கைகள் படிக்கக் கிடைக்கும். இந்தப் படத்தைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில் எழுதியிருந்தார்கள். நந்திதா போஸ் டவுன் பஸ்ஸில் செல்லும் காட்சியில் அவர் மேல் படர்ந்து விலகும் பார்வைகளை எப்படி காமிரா மூலம் அழகாகக் காட்சிப் படுத்தியிருந்தார்கள் என்று சொல்லி இருந்தார்கள். ஒரு பஸ் காட்சியில் காமிரா இப்படி புகுந்து புறப்படுவது அப்போதெல்லாம் பெரிய விந்தை.  இந்தப் படத்தை ஓரு இளைஞர் பார்த்தார். ஒரு காட்சியில் பஸ் சன்னலோரம் அமர்ந்திருக்கும் நந்திதா போஸின் ஒற்றை முடி காற்றில் பறக்கும். இந்த் காட்சியால் உந்தப் பட்டு திரைப்பட இயக்குநர் ஆக விரும்பினேன் என்று சொன்னா...

ஒரு மனிதன்

  ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இந்த விருது கொடுத்ததன் மூலம் சாகித்ய அகாடமி தன்னைக் கெளரவப்படுத்திக் கொண்டது என்று அவர் சொன்னார். விருது கிடைத்ததை விட இந்தப் பேச்சைப் பற்றியே எல்லோரும் பேசினார்கள். விருது வாங்கியதை முன்னிட்டு டெல்லியில ஒரு கூட்டம் நடந்திருக்கிறது. ஜெயகாந்தன் பேச வருகிறார். மைக் வேலை செய்ய வில்லை. உடனே ஜெயகாந்தன் தலையை மேலும் கீழும் அசைக்கிறார். உடனடியாகப் பார்வையாளர்களிடம்  ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார். Instant connect with the audience. இதைப் பற்றி கணையாழி பத்திரிக்கையில எழுதியிருந்தார்கள். மேலும் அவரோடு ஒரு பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள்.  மதுரையில் ஜெயகாந்தன் பேச்சை மூன்று முறை கேட்டிருக்கிறேன். ஒன்று துக்ளக் பத்திரிக்கை இரண்டாவது ஆண்டு விழா. நான் பள்ளி மாணவன். அது பங்களாதேஷ் பிறந்த நேரம். முஜிபுர் ரஹ்மான் பற்றியும் வங்கம் பிறந்தது பற்றியும் மிகுந்த ஆவேசமாகப் பேசினார். வங்காளம் பிறந்த அந்த நாட்களில் எல்லோரும் மிகுந்த மனவெழுச்சி கொண்டிருந்தோம்.  இரண்டாவது மணியன் நடத்திய இதயம் பேசுகிறது பத்திரிக்கை விழா. சிவசங்கரி,ஓவியர்...

மண்ணுலகத்து நல் ஓசைகள்

  காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள் மாலின்  வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ  இது நாச்சியார் திருமொழி.  ஆண்டாளின் திருப்பாவையில் தான்  எத்தனை ஓசைகள். வலம்புரிச் சங்கு அதிரும் ஓசை. கீசு கீசென்று ஆனைச்சாத்தனின் பேச்சரவம். ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்தத் தயிர் அரவம். வெள்ளை விரிசங்கின் பேரரவம். மெள்ள எழும் ஹரி என்ற பேரரவம். சிங்கம் மூரி நிமிர்ந்து முழங்கும் ஓசை. மாதவிப் பந்தல் மேல் கூவும் குயில் இனங்களின் ஓசை. செந்தாமரைக் கையாளின் வளை ஓசை. இப்படி எல்லாம்.. நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு நாய்கள் குலைப்பதுவும், எண்ணுமுன்னே‘அன்னக் காவடிப் பிச்சை’யென் றேங்கிடு வான் குரலும், வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை விம்மிடும் சங்கொலியும், வாதுகள் பேசிடு மாந்தர் குரலும் மதலை யழுங் குரலும், ஏதெது கொண்டு வருகுது காற்றிவை எண்ணி லகப்படுமோ? அது பாரதி.. மணி ஒலிக்கிறது. நாய்கள் குலைக்கின்றன. அன்னக் காவடியின் பிச்சைக் குரல். வீதிக் கதவை அடைக்கும் ஓசை. கிழக்கு திசையிலிருந்து வரும் சங்கொலி.  மனிதர்கள் புரணி பேசும் குரல். குழந்தை அழும் குரல்.  எத்தனை எத்தனை ஓலிகள். அ...

இருளை மூடிய இருள்

  My friend is a stranger, someone I do not know. A stranger far far away. For his sake my heart is full of disquiet because he is not with me. Because, perhaps, after all he does not exist. Who are you who so fill my heart with your absence? Who fill the entire world with your absence? You who existed before the mountains and the clouds, before the sea and the winds. You whose beginning is before the beginning of all things, and whose joy and sorrow are older than the stars. You who from eternity have wandered among the stars of the Milky Way and through the great darknesses between them. You who were alone before loneliness, and whose heart was full of disquiet before any human heartdo not forget me. But how could you possibly remember me? How could the sea possibly remember the sea-shell that once it surged through. PAR LAGERKVIST Translated by W. H. Auden with Leif Sjberg பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பாரபாஸ் என்ற நாவலைப் பற்றி முன்னம் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவருடைய மற்ற...

கடலளவு கிடைத்தாலும்

  ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே? அடக்குவித்தால்                           ஆர் ஒருவர் அடங்காதாரே? ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே? உருகுவித்தால்                             ஆர் ஒருவர் உருகாதாரே? பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே? பணிவித்தால் ஆர்                                  ஒருவர் பணியாதாரே? காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே? காண்பார் ஆர்,                          கண்ணுதலாய்! காட்டாக்காலே?. இது அப்பர் பெருமானின் தனித்திருத்...

ஆசையின் பக்கங்கள்

  திருக்குறளைப் படிக்கப் படிக்க வியப்பு பெருகுகிறது. குறுகிய வரிகளில் எத்தனை நுட்பமான கருத்துக்கள்.  திருக்குறள் பலரையும் கவர்ந்து இருக்கிறது. டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறள் பற்றிப் பேசுகிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் கால்டுவெல் போப் மொழி பெயர்த்திருக்கிறார். ராஜாஜி மொழிபெயர்த்திருக்கிறார். மூன்றாவது பாலைத் தவிர்த்து விட்டார். சுத்தானந்த பாரதி செய்திருக்கிறார். அது ஒரு நல்ல மொழிபெயர்ப்பு. சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜாஜியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். சமீபத்தில் மீனா கந்தசாமி காமத்துப் பாலை The Book of Desire என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறார். 1984ல் பிறந்த மீனா கந்தசாமி கவி. எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். சமூகச் செயல்பாட்டாளர்.  இந்த The Book of Desire பற்றி ஒரு கட்டுரையைப் படித்தேன். 1113 வது குறளை மீனா கந்தசாமி இப்படி மொழி பெயர்த்திருக்கிறார். முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு My bamboo-shouldered beauty has a slender frame, a pearly smile, a fragrance that drives me wild, a...