Skip to main content

Posts

நிலவும் நிழலும்

 இளையராஜா, மன்னிக்கவும் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அரசே நடத்திய விழா. சிகரம் தொட்ட தமிழன் என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். சிம்பனி என்ற மேற்கத்திய இசை வடிவத்தை உருவாக்கியதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா. இந்த விழாவில் பேசியவர்கள் பெரிதாக சிம்பனி பற்றிப் பேசவில்லை. உணர்ச்சிப் பெருக்கில் இளையராஜாவால் சரியாகப் பேச முடியவில்லை. இதை அவரே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். மூகாம்பிகை மேல் கொண்ட பக்தி குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனது பற்றி எல்லாம் பேசியவர் ரஜினிகாந்தோடு சேர்ந்து குடித்ததைப் பற்றிக் கூற முயன்றார். சரிவர அதைச் செய்ய முடியாமல் போனது. அவருக்கு உதவி செய்ய ரஜினிகாந்த் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மைக்கைப் பிடித்தார். பெருத்த ஆரவாரம். ரஜினிகாந்த் மகேந்திரன் மற்றும் இளையராஜாவோடு சேர்ந்து குடித்ததை பெருங்கூட்டத்தோடு பகிர்ந்து கொண்டார். எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.  இசைதான் வாழ்வு என்று ஆனபின் இளையராஜா மிகுந்த ஈடுபாடு மற்றும் முனைப்புடன் தனது வேலையைச் செய்தார். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தார். தனிப்ப...

நெஞ்சுக்கு நிம்மதி

 நான் ஹிந்தி மொழியைக் கற்றது பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழியாகத்தான். எங்கே உருது கலந்திருக்கும் என்று நான் அறிந்ததில்லை. ஆறு வருடங்கள் வட இந்தியாவில் இருந்திருக்கிறேன். நான் ஹிந்தி பேசுவது திரைப்படத்தில் பேசுவது போல இருக்கிறது என்று அங்கு உள்ளவர்கள் சொல்வார்கள். எங்கு சென்றாலும் நான் நட்பு பாராட்டுவது கடைநிலை ஊழியர்களோடு. அவர்களுடனான நட்பு எனக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்திருக்கிறது. ஒருமுறை கடவுளைக் குறிப்பதற்கு குதா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். ஜெனரேட்டரை இயக்கும் பையன் என்னைக் கடிந்து கொண்டான். குதா என்று சொல்லாதீர்கள். பகவான் என்று சொல்லுங்கள் என்று சொன்னான். எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. குதா என்பது உருதுச் சொல். கடுமைக்குக் காரணம் அது தான். எழுபது காலக் கட்டங்களில் பெரிதும் விரும்பிக் கேட்டது ஹிந்தித் திரைப்படப் பாடல்கள் தான். அதிலும் ஆர் டி பர்மன் இசையில் கிஷோர் குமார் பாடலைக் கேட்டால் மனம் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடும். இசையும் குரலும் மனதில் உணர்ச்சிகளை மீட்டி விடும். இளமை தரும் மனவெழுச்சி எல்லாம் வார்த்தைகள் காட்ட...

நோக்கி நோக்கி

 குறுந்தொகையில் ஒரு பாடல். வெள்ளிவீதியார் இயற்றியது. செவிலித் தாய் பாடுவதாக அமைந்திருக்கிறது. காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே . பொருளைப் பார்க்கலாம். தலைவி தலைவனுடன் சென்று விட்டாள்.  அவளைத் தேடி ஓடி ஓடி கால்கள் சலித்துப் போயின.  அவள் சென்ற திசையைப் பார்த்துப் பார்த்து கண்களில் ஒளி குன்றியது. இந்த உலகத்தில் எத்தனையோ பேர் உள்ளனர். அகன்ற வானில் உள்ள நட்சத்திரங்களை விட அளவில் அதிகமானவர்கள். எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? செவிலித் தாய்  இப்படித் தனியே நின்று புலம்புகிறாள் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்று. நோக்கி நோக்கி உன்னைக் காண்பன்  நாக்கு நீள்வன் ஞானம் இல்லை நாள்தோறும் என்னுடைய  ஆக்கை உள்ளும் ஆவி உள்ளும் அல்ல புறத்தின் உள்ளும்  நீக்கம் அன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே நோக்கி நோக்கி உன்னைக் காண்பன் என்ற சொல்லில் எத்தனை வேட்கை. மீண்டும் மீண்டும் காண வேண்டுமென்ற மீளாத வேட்கை. உயிரின் உள்ளேயும் உடம்பின் உள்ளேயும் வெளியில் எங்கும் நீக்கம் இன்றி நிற்கும் ப...

இழந்த காலங்கள்

  Missed Time My notebook has remained blank for months thanks to the light you shower around me. I have no use for my pen, which lies languorously without grief. Nothing is better than to live a storyless life that needs no writing for meaning— when I am gone, let others say they lost a happy man, though no one can tell how happy I was. Ha Jin இழந்த காலங்கள் என்னுடைய நோட்டுப் புத்தகம் எல்லாம் வெற்றுத் தாள்கள் பல மாதங்களாக காரணம் என்னவென்றால் நீ என்னைச் சுற்றித் தூவும் ஒளி பேனாவுக்கு வேலை இல்லை அது சோம்பிக் கிடக்கிறது  எவ்வித வருத்தமும் இன்றி கதை இல்லாத வாழ்க்கை வாழ்வதை விடப் பெரிதான வேறொன்று இல்லை அதை எழுதிப் பொருள் கொள்ளத் தேவையும் இல்லை நான் சென்று விடுவேன் அப்போது பிறர் சொல்லட்டும்  ஒரு சந்தோஷமான மனிதனை இழந்தோமே என்று ஆனால் யாராலும் சொல்ல முடியாது அவன் எத்தனை சந்தோஷமாக இருந்தான் என்று ஹா ஜின் தமிழில் தி சந்தானம்

மதிய உணவிற்குப் பிறகு

  After Lunch After eating lunch, I feel so sleepy. Waking later, I sip two bowls of tea, then notice shadows aslant, the sun already low in the southwest again. Joyful people resent fleeting days. Sad ones can't bear the slow yers. It's those with no joy and no sorrow— they trust whatever this life brings. Bai JuYi மதிய உணவிற்குப் பிறகு மதியம் சாப்பிட்ட பின் தூக்கமாக வருகிறது  விழித்து எழுந்த பின் இரண்டு கோப்பை தேநீர் பருகினேன் பின்பு கண்டு கொண்டேன் சாய்வான கிரணங்களை தென் மேற்கில் ஏற்கனவே இறங்கியிருக்கும்  சூரியனை சந்தோஷமான மனிதர்கள் விரைந்து போகும் நாட்களுக்கு  வருந்துகிறார்கள் துயரமானவர்கள்  வருடங்கள் மெல்ல நகருவதைத்  தாங்கிக் கொள்கிறார்கள் இல்லை மகிழ்ச்சியோ துயரமோ அற்றவர்கள் வாழ்க்கை கொண்டு வருவது எதுவாயினும் நம்பிக்கை கொள்கிறார்கள் சீனக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில் தி சந்தானம்

இழந்து போன குரல்

 . வாழ்க்கையில் எல்லாம் கடந்தபடியே இருக்கிறது. பழகிய மனிதர்கள் தொலைவிலேயே நின்று விடுகிறார்கள். ஆனால் அவர்களது குரல் காலமெல்லாம் தொடர்ந்து வருகிறது. பிரியத்துடன் பேசிய குரல்கள். ரகசியம் பகிர்ந்த குரல்கள். ரசனையான பேச்சில் பரவசம் காட்டிய குரல்கள். இப்படி எல்லாம்.. எல்லாம்…. சமீபத்தில் இந்தக் கவிதையைப் படித்தேன். ஒரு சின்னக் கவிதை என்னவெல்லாம் செய்து விடுகிறது? Idealized, beloved voices of those who have died or are lost to us like the dead. Sometimes they speak in our dreams; and our mind hears them in our thoughts. And with their echo for an instant echoes of the first poetry in our lives come back like music that fades into the distant night Constantine Cavafy இழந்து போன குரல் போற்றிய குரல்கள் பிரியமான குரல்கள் இறந்தவர்கள் குரல்கள் இழந்து போன குரல்கள் சில பொழுது அவை கனவில் நம்மோடு பேசுகின்றன எண்ணங்களில் நமது மனது கேட்கிறது ஓரு கணம் அவை எதிரொலிக்கும் போது வாழ்வின் முதல் கவிதை போல ஒலிக்கிறது அது இரவில் தொலைவில் தேய்ந்து மறையும் இசை போன்றே இருக்கிறது தமிழில்  தி சந்தானம்

ஒரு குள்ள நரியின் தினம்

 To be honest, I never intended to be a writer at all. Long periods of solitude were first a circumstance, then a preference and finally a necessity. Frederick Forsyth in his book The Outsider 1978ம் வருடம் ஒரு தீபாவளி நன்னாளில் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். அது The Day of the Jackal. பிரெஞ்சு அதிபர் டி கோல். அவரைக் கொல்ல முடிவு செய்கிறார்கள். கூலிக்கு ஒருவனை நியமிக்கிறார்கள். Hired assassin. இதற்காக அவன் மாறி மாறி வேடம் அணிந்து கொள்கிறான். போலி அடையாள அட்டை போலி பாஸ்போர்ட் எல்லாம் தயாரித்து பலர் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பிரான்ஸ் வருகிறான். போரில் மடிந்த வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி.  கால் இழந்த முன்னாள் ராணுவ வீரன் போல வேடமிட்டு வருகிறான் கொலையாளி. ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் டெலஸ்கோப் பொருத்திய மெளனத் துப்பாக்கியோடு காத்திருக்கிறான். அதிபர் டி கோல் தன் கையால் ஒவ்வொருவருக்கும மெடல் குத்தி விடுகிறார். டி கோல் கிட்டத்தட்ட ஏழடி உயரம். உயரமான கட்டிடத்தின் மேலிருந்து கொலையாளி அதிபரின் நெற்றிப் பொட்டைக் குறி பார்த்தபடி இருப்பான். துப்பாக்கியின் விசையை அழுத்துவா...

வேதம் தமிழ் செய்த மாறன்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள் உண்டோ சடகோபருக்கு ஒப்பு ஒருவர்—-உண்டோ திருவாய்மொழிக்கு ஒப்புத் தென் குருகைக்கு உண்டோ ஒரு பார் தனில் ஒக்கும் ஊர் உபதேசரத்தினமாலை  சடகோபர் அந்தாதியைப் படிக்க வாய்த்தது. கம்பன் இராம காதை எழுதி திருவரங்கத்தில் அரங்கேற்ற எண்ணுகிறான். ஒரு நாள் இரவு அரங்கன் கம்பனின் கனவில் தோன்றி நம் சடகோபனைப் பாடினையோ என்று வினவுகிறார். மெய் விதிர்த்துப் போன கம்பன் சடகோபன் பேரில் ஒரு நூறு பாடல்கள் இயற்றுகிறான். அதுவே சடகோபர் நூற்றந்தாதி. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனின் சொற்களை வியந்து மோற்றுகிறார் கம்பன். சில பாடல்களைப் பார்க்கலாம். சொல்லென்கெ னோமுழு வேதச்‌ சுருக்கென்கெ னோவெவர்க்கு  நெல்லென்கெ னோவுண்ணு நீரென்கெ னோமறை நேர்நிறுக்குங்‌  கல்லென்‌ கெனோமுதிர்‌ ஞானக்‌ கனியென்கெனோபுகல  வல்லென்கெ னோகுரு கூரெம்பிரான்‌ சொன்ன மாலையையே,. சொல்லென்பதா? வேதத்தின் சுருக்கம் என்பதா? உண்ணும் சோறு என்பதா? பருகும் நீர் என்பதா? வேதத்தை நிறுக்கும் தராசுக் கல் என்பதா? நன்கு பழுத்த ஞானக் கனி என்பதா? குருகூரில் அவதரித்த சடகோபன் தொடுத்த சொல் மாலை பற்றி எனக்குச் சொல்லும் தி...

மனதில் வளரும் கதை

 For Sale: Baby shoes, never worn அது ஆறே வார்த்தைகள் கொண்ட சிறுகதை. ஹெமிங்வே எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மெய்யாகவே இப்படி ஒரு கதையை ஹெமிங்வே எழுதியிருக்கிறாரா தெரியாது. ஆறு வார்த்தைகளில் ஒரு கதையைச் சொல்லி விட முடியுமா? ஆறு வார்த்தைகளில் கதையைக் கோடிட்டுக் காட்டலாம். மிகுதிக் கதையை வாசிப்பவர் மனது உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான்.  For Sale: Baby shoes, never worn இந்த வரிகள் என்ன சொல்கிறது. ஒரு பொழுதும் அணியாத குழந்தையின் காலணி ஏன் விற்பனைக்கு வர வேண்டும். குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கி வைத்த காலணி. ஆனால் பிறக்கவில்லை. இனியும் பிறக்க வாய்ப்பில்லை. எனவே காலணி விற்பனைக்கு வருகிறதோ? இப்படி எல்லாம் மனதில் கதை வளர்கிறது. ஹெமிங்வேயின் ஒரு சிறுகதை Cat in the Rain. விடுமுறையைக் கழிக்க அமெரிக்கத் தம்பதி இத்தாலியில் ஒரு ஊருக்கு வருகிறார்கள். ஒரு விடுதியில் தங்குகிறார்கள். அவர்களது அறை இரண்டாவது மாடியில். அங்கிருந்து தொலைவில் கடல் தெரிகிறது. எதிரே பூங்கா. மற்றும் ஒரு போர் நினைவுச் சின்னம். வந்ததிலிருந்து விடாது மழை பெய்கிறது. எங்கும் போகவில்லை. கணவன் எப்போதும் புத்தகம்...

தபாலில் இடாத கடிதம்

            தபாலில் இடாத கடிதம் சிறுகதை                                         தி சந்தானம் வெகு நாட்களாக உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் இருக்கும் இடம் தெரியாது. இந்தக் கடிதம் உங்களிடம் வந்து சேருமா? உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எண்ணம் கொண்டு போகும் வேகத்தில் எழுதிப் போகிறேன். என்னுடைய கையெழுத்து மாறியிருப்பதாக நீங்கள் கருத மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நெல்லின் மணியைப் பொறுக்கி எடுத்துச் சாய்த்து சாய்த்து வைத்தது போல நீண்டு சிறிதான உங்கள் கையெழுத்து ஞாபகம் வருகிறது. கண்ணீர் வருகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. காரணம் தெரியவில்லை. நட்பும் ஆன்மீகம் போலத்தானோ? உங்களுடைய சிரிப்பு, மென்மையான பேச்சு எல்லாம் எனது மனதில் ஒரு ஆன்மீகத்தையே விதைக்கிறது. நான் மேன்மேலும் நம்பிக்கை பெறுகிறேன். எப்போதும் உங்களைச் சார்ந்து இருக்கவே விரும்புகிறேன். உங்களால் நிராகரிக்கப்படவில்லை என்பதிலிருந்தே ஆறுதல் பெறுகிறேன். உங்களுடைய இங்கிதம் ஒ...