Skip to main content

Posts

பறவையை வரைவது

 எண்பதுகள் சிறு பத்திரிகைகளின் காலம். எண்ணிலடங்காத சிறு பத்திரிக்கைகள் வெளி வரும். எழுத்து, நடை, கசடதபற, ழ, கல் குதிரை, பிரக்ஞை, வெளி, விருட்சம் என்றெல்லாம் பெயர்கள். பெரும்பாலும் தவற விட்டது இல்லை. வாங்கிப் படித்திருக்கிறேன். இலக்கியப் பத்திரிக்கைகள் சில இடது சாரி அரசியல் சார்ந்து இருக்கும்.. முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்த பத்திரிக்கைகளும் உண்டு.  இளமை கட்டுக்கு அடங்காதது. வேகம் கொண்டு எங்கும் பரவுவது. மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டு திரிவது. பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றிய எங்களைப் போன்றவர்கள் பூபாளம் என்று கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திப் பார்த்த காலமது. சமீபத்தில் மறைந்து விட்ட நண்பர் செளந்தரராஜன் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினார். அவர் என்னோடு அறிமுகமானதற்குக் காரணமே அதுதான். அன்று தொடங்கிய நட்பு இத்தனை காலம் தொடர்ந்தது. நாம் துவக்கத்தில் குறிப்பிட்ட பத்திரிக்கைகளில் ஏதோ ஓரு பத்திரிக்கையில் (சரியாக நினைவில்லை) ஸ்ரீராம் என்பவர் ஒரு பிரெஞ்சுக் கவிதையை மொழிபெயர்த்து எழுதியிருந்தார். நான் அறிந்த வரையில் ஸ்ரீராம் பிரெஞ்சு மொழியிலிருந...

எய்த்தார்

 நேற்று (14.3.2026) மாலை செளந்தரராஜன் உயிர் பிரிந்தது. நட்புக்கு வயது உண்டா? அப்படி என்றால் நாற்பத்து மூன்று ஆண்டுகள் என்று சொல்லலாம். மரத்திலிருந்து இலை உதிர்வது போல ஒவ்வொருவராக நீங்குகிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் என்னோடு பேசினார். சுகுமாரன் எழுதிய பெருவலி என்ற நாவலைப் பற்றி சொன்னார். வாசிப்பும் இலக்கியமும் ரசனையும் தானே எங்களை இணைக்கும் புள்ளிகளாக இருந்தன? செளந்தர் புத்தகங்களை விரும்புபவர். விரும்பி வாசிப்பவர். வாசித்த புத்தகங்களைப் சேகரித்து வைப்பவர். சேகரித்த புத்தகங்களைத் தொட்டு உணர்ந்து மகிழ்பவர். ஆயிரக் கணக்கில் புத்தகங்கள் அவரது சேமிப்பில் உண்டு. அத்தனையும் படிக்கப்பட்டு அவருக்குப் பிரியமான பகுதிகளில் பென்சிலால் அடிக்கோடு இடப்பட்டிருக்கும். காலை பெங்களூர் விமான நிலையத்தில் ஸோனாவைப் பார்த்தேன். கோவை செல்வதற்கு Lay over ல் இருந்தாள். எனக்கும் அதே விமானம் தான். திகைப்பு பயம் சோகம் எல்லாம் அவள் முகத்தில் எழுதப் பட்டிருந்தது. பேசுவதற்கு வார்த்தை இல்லை. கண்களில் நீர் அரும்பியது. மெளனமான அசைவுகள் சோகத்தைப் பரிமாறிக் கொள்ள போதுமானதாக இருந்தன. ஸோனா செளந்தரின் ஒரே மகள். ஓரே...

பூவாகி காயாகி

 I was once a tree- all green. Very tall, bobbing in the wind. I had leaves, branches. And occasional flowers. I, too, had a name. A woman. A mother. Once a tree. I brush them aside, My tears, an upright foliage Lying heavy on my chest. Ranu Uniyal This Could Be a Love Poem for You Collection of Poems நான் முன்பொரு காலம் ஒரு மரமாக இருந்தேன் மிகவும் உயரம் எங்கும் பசுமை எனக்கு இலைகள் இருந்தன கிளைகள் இருந்தன அரிதாக மலர்கள் எனக்கும் ஒரு பெயர் உண்டு ஒரு பெண். ஒரு அன்னை முன்பு ஒரு மரம் நான் அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளுகிறேன்  நிமிர்ந்திருக்கும் இலைகள் போல எனது கண்ணீர்த் துளிகள் இதயத்தில் கனமாக விழுந்து கிடக்கிறது ரானு உனியல்  தமிழில் தி சந்தானம் பெண் மரமாக தன்னை நினைக்கிறாள். மலராக முகிழ்க்கிறாள். கனியாக இனிக்கிறாள். தண்ணென்று நிழல் தருகிறாள். சுற்றம் என்னும் பறவைகள் எல்லாம் அருகில் கூடிக் கலகலப்பாய் சிரிப்பதை ரசிக்கிறாள். ஜெய்ஹிந்த்புரம் என்றெல்லாம் மதுரையில் ஒரு பகுதிக்குப் பெயர் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பதினைந்து வருடம் ஆகியிருந்தது. நேரு என்று ஒரு தலைவர் இருந்தார். ...

கடலும் தொடு வானும்

  கவிதைகளோடு காலமெல்லாம் உறவாடியபடி இருக்கிறேன். அந்த உறவு ஒழிவதில்லை. கவிதை எங்கிருந்து எல்லாமோ வந்து என்னிடம்  சேர்கிறது.  காலை நனைக்கும் ஆற்று நீரை அள்ளிப் பருகுவதைப் போல கவிதைகளைப் பருகுகிறேன். சில பொழுது சட்டென ஒரு வெறுமை வந்து சூழ்கிறது. ஏனென்று தெரிவதில்லை இனி கவிதைகள் A torn cloud above the sea. A wounded heart on the sand. The sun sets, uncaring. Nujoom Al-Ghanem அறுந்து போன மேகம் கடலின் மேலே காயம் பட்ட இதயம் மண்ணின் மீது சூரியன் சாய்கிறது  அதற்கென்ன கவலை? I speak to trees all day long and dream of them at night. பகலெல்லாம் மரங்களோடு பேசுகிறேன் இரவெல்லாம் அதைப் பற்றி கனவு காண்கிறேன் The train rushes on, carrying memories. Laughter hovers over the fields like old souls. She wished someone had been awaiting her at the next stop. ரயில் விரைகிறது நினைவுகளைச் சுமந்தபடி சிரிப்பு வயல் வெளிகளின் மீது நிலை கொள்கிறது பழைய உயிர்களைப் போல வரவிருக்கும் நிறுத்தத்தில் எவரேனும் அவளுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றே விழைகிறாள்  The train back empty. Fatigue floats on n...

யாவருக்குமான கவிதை

  Like you I love love, life, the sweet smell of things, the sky-blue landscape of January days. And my blood boils up and I laugh through eyes that have known the buds of tears. I believe the world is beautiful and that poetry, like bread, is for everyone. And that my veins don’t end in me but in the unanimous blood of those who struggle for life, love, little things, landscape and bread, the poetry of everyone. Roque Dalton Salvadorian poet உன்னைப் போலவே நானும் நேசிக்கிறேன் நேசத்தை, வாழ்வை, இனிய வாசங்களை, நீல ஆகாயத்தை, ஜனவரி மாதத்தின் நிலப் பரப்பை எனது ரத்தம் கொதிக்கிறது கண்கள் வழியாகச் சிரிக்க முயல்கிறேன்  கண்ணீர்த் துளிகளின் மொக்கு மட்டும் அறிந்த கண்கள் அது நான் இந்த உலகம் அழகானது என்று நம்புகிறேன் மேலும் கவிதை, சோறு போல எல்லாருக்கும் ஆனது என்றும் எனது நாளங்கள் சென்று முடிவது ஏகோபித்த குருதியில் வாழ்விற்காக, அன்புக்காக சின்னச் சின்ன விஷயங்களுக்காக நிலப் பரப்புக்காக சோறுக்காக யாவருக்குமான கவிதைக்காக  போராடுபவர்களின்  ஏகோபித்த குருதியில் தமிழில் தி சந்தானம்

இரவு என்பது பத்து நிமிடம்

 வினோத் குமார் சுக்லா செவ்வாய்க் கிழமை 23.12.2025 அன்று மறைந்தார். 88 வயது. ஹிந்திக் கவிஞர். கதைகளும் எழுதி இருக்கிறார். नौकर की कमीञ நெளகர் கீ கமீஸ் (வேலைக்காரனின் சட்டை) அவர் எழுதிய நாவல். இதை மணி கெளல் திரைப்படம் ஆக்கினார். இந்த இரண்டு நாட்களில் இவருடைய நிறைய கவிதைகளைப் படித்தேன்.  எளிமையான சொற்கள் . கனிந்த கருத்துக்கள். பிரமித்துப் போனேன். Simple is the seal of virtue.   குழந்தைகள் சில சமயம் நம்மிடம் கேள்வி கேட்கும். பதில் சொல்ல முடியாது. யோசித்தபடியே நின்று விடுவோம்.  இவருடைய கவிதைகளைப் படிக்கும் போது அப்படி ஒரு அனுபவம் நேர்கிறது. சின்னதாக கணக்கு போடுவது போல ஒரு கவிதை. रात दस मिनट की होती तो पाँच मिनट में आधी रात हो जाती रातें ऐसी ही बीतीं। दिन दस मिनट का होता तो पाँच मिनट में आधा दिन बीत जाता दिन ऐसे ही बीते। मैं दो दिन की ज़िंदगी जी सकता हूँ एक दिन मैं तुम्हारे पास रहूँगा दूसरे दिन तुम मेरे पास रहना। இரவு என்பது பத்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடத்தில் நடுநிசி ஆகிவிடும் இரவுகள் இப்படியே கழிந்து விடும் பகல் என்பது பத்து நிமிடம் என்றால் ஐந்தே நிமிடத்தில் நண்...

பனியின் வாசமும் கூந்தலின் ஈரமும்

 Moonlit Night Tonight my wife must watch alone the full moon over Fu-zhou; I think sadly of my sons and daughters far away, too young to understand this separation or remember our life in Chang'an. In fragrant mist, her flowing hair is damp; In clear moonlight, her jade-white arms are cold. When will we lean at the open casement together while the moonlight dries our shining tears? Du Fu நிலவொளி இரவு இன்று இரவு எனது மனைவி தனியே முழு நிலவைக் காண்பாள்  தூர தூரத்தில் இருக்கும் எனது மக்களை நினைத்துக் கொள்கிறேன் வயதில் சிறிய அவர்களுக்கு இந்தப் பிரிவின் துயரம் புரியாது சாங்கனில் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கை கூட நினைவில் இருக்காது பனியின் வாசமும் விழுகின்ற அவள் கூந்தலின் ஈரமும்.. தெளிந்த நிலவில் தண்ணென்றிருக்கும் வெண்ணிறக் கைகளும்.. நாங்கள் எப்போது இனி ஒன்றாக திறந்த சன்னலின் மீது சாய்ந்து இருப்போம் நிலவொளி எங்கள் ஒளிரும் கண்ணீர்த் துளிகளை உலரச் செய்யும் போது சீனக் கவிஞர் டூ ஃபூவின் கவிதை சங்க காலக் கவிதை போல இருக்கிறது. பள்ளிப் பருவத்தில் படித்த சத்திமுத்தப் புலவரின் பாடல் ஞாபகம் வந்தது...

காலம் வெளி கடந்து

    காலம் என்றால் என்ன                          அது ஒரு பூ                                  அந்தப் பூவுக்குள்                                      ஒரு உலகம் இருக்கிறது                                                 மகிழ் ஆதன் ஊழி என்று ஒரு சொல் உண்டு. அது ஒரு நீண்ட காலப் பகுதியைக் குறிக்கிறது. யுகம் என்று சொல்கிறோம் இல்லையா? ஊழி தோறு ஊழி ஒருவன் என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி சொல்லும்.  காலம் என்பது நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஒரு கரிய நிழல் போல. அது நிலை பெயராத ஒன்றா அல்லது தொடரும் ஒரு இயக்கமா என்பதில் குழப்பம் வருகிறது. அது அசைவது கிடையாது. அது ஒரு மெளன சாட்சி என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறது. கண்ணுக்கு ம...

தூக்கம் உன் கண்களை

 தூங்கும் நேரம் தவறிப் போனால் அதைப் பிடிப்பது கடினம். ஊரெல்லாம் துஞ்சுகிறது. உலகெல்லாம் நள்ளிருள் சூழ்கிறது. தூக்கம் வருவது இல்லை. எண்ணங்கள் வந்து சூழ்கிறது. இரவைக் கடத்துவது கடினமாகி விடுகிறது. Sleep dwell upon thine eyes, peace in thy breast. Would I were sleep and peace so sweet to rest. அது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் வரும் வசனம். காதல் வயப்பட்ட ரோமியோ அவளைப் பிரிந்து செல்லும் போது இப்படிச் சொல்கிறான். காதல் தூக்கத்தையும் நிம்மதியையும் பறித்து விடுகிறது. எனவே தூக்கமும் அமைதியும் அவளுக்கு வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறான். தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்  உன் ஹ்ருதயத்தில் சாந்தி இளைப்பாறட்டும். அந்தத் தூக்கமும் அமைதியும் நானாக இருந்தால்… இது அம்பிகாபதி என்ற 1937ம் வருட திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பேசும் வசனம். இந்த வசனத்தை எழுதியவர் இளங்கோவன். படத்தை இயக்கியவர் எல்லிஸ் ஆர் டங்கன். அம்பிகாபதி கவிஞன். கம்பரின் மகன். ஆனால் இந்தப் படத்தில் எம் கே டி கவிதையைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அமராவதியாக நடிக்கும் எம் ஆர் சந்தானலட்சுமியை அடிக்கடி காதல் பார...

தொலை தூரம் சென்று விடாதே 2

சென்ற பதிவின் தொடர்ச்சி......  தீவிலேயே அழகான ஒரு பெண்ணை மரியோ நேசிக்கிறான். நேசம் வளர நெருடாவின் கவிதைகள் உதவுகிறது. காதலியிடம் அந்தக் கவிதைகள் எல்லாம் தான் எழுதியதாகவே காட்டிக் கொள்கிறான். நெருடாவுக்கு எல்லாம் தெரியும். தபால்காரனின் காதலுக்கு தனது கவிதைகள் உதவியதில் அவருக்கு உள்ளூர மகிழ்ச்சியே. இருந்தாலும் மரியோவிடம கேட்கிறார். நான் எனது காதலிக்காக எழுதிய கவிதையை நீ எப்படி உனது காதலிக்கானதாகக் கொள்ளலாம்?. அது எனது எழுத்தைத் திருடுவது ஆகாதா என்று. மரியோ சட்டெனச் சொல்கிறான். கவிதை எழுதியவருக்கு உரியது இல்லை. எவருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்கு உரியது. காதல் மரியோவை சிந்தனை வயப்பட்டவனாக ஆக்குகிறது. மனதில் சொல்ல முடியாத ஒரு சோகத்தை ஏற்றுகிறது. அவனது காதல் ஏற்று கொள்ளப்படுகிறது. என்றாலும் காதலியை வளர்த்தெடுத்த அத்தை திருமணத்திற்குக் குறுக்கே நிற்கிறாள். எப்படியோ சம்மதம் பெற்று நெருதா சாட்சிக் கையெழுத்து இடத் திருமணம் நடைபெறுகிறது.  திருமண நாளன்று அக்கார்டியன் ஆனந்த இசை இசைக்கிறது. மதுக்கோப்பைகள உயருகின்றன. மகிழ்ச்சியான சேதி வருகிறது. நெருடாவுக்கு தந்த தண்டனை நீக்கப்பட்டு மீண்டு...