Skip to main content

Posts

குழந்தையைப் போல

  எட்டு வயதில் டால்ஸ்டாய் அறிமுகம் ஆனார். அந்த வயதில் நூலகம் தெரியாது. சென்று புத்தகங்களைப் புரட்டி அறிந்து கொள்ள. பெரியவர்கள் யாராவது சொல்லி இருக்கலாம். அப்படியும் இல்லை. வீட்டிற்கு எதிரே நான் படித்த ஆரம்பப் பள்ளி.  ஆசிரியைகள் யாரும் டால்ஸ்டாயைப் பற்றிச் சொல்லவில்லை. ராஜேந்திரன் கதை சொல்வான். அது மகாபாரதத்திலிருந்து இருக்கும். பாண்டவர் வனவாசத்தின் போது நிகழ்ந்தவையாக இருக்கும்.  எல்லாம் சுவாரசியமான கதைகள்.  எனில் முதல் முதலாக டால்ஸ்டாயை அறிந்தது ஒரு திரைப்படத்தின் முலமாக. எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு தியேட்டர் இருந்தது. சந்திரா டாக்கீஸ் என்று சொல்லுவோம். அங்கே குழந்தையும் தெய்வமும் என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில் குட்டி பத்மினி என்று ஒரு சிறுமி இரட்டை வேடத்தில் நடித்தாள். தாயும் தந்தையும் மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.  இத்தனைக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்துப் பின்பு மணம் புரிந்தவர்கள். தன்மானம் உள்ள அவனால் பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகப் பொருந்தி வாழ முடியவில்லை பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைத் தந்தை எடுத்துச் சென்று விடுகிறான். அவள் பெயர் ...

தோற்கவில்லை

  ஹெமிங்வே The Sun also rises" என்று ஒரு நாவல் எழுதினார். அதுதான் அவருடைய முதல் நாவல். கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் பாரீஸில் இருந்தார். அந்த சமயம் எழுதப்பட்ட நாவல் அது. ஸ்பானிய காளைச் சண்டையை மையமாக வைத்து எழுதினார் என்று சொல்வார்கள். நான் அந்த நாவலைப் படித்ததில்லை.  ஆனால்  The Undefeated என்ற அவரது கதையைப் படித்தது உண்டு.  அது ஒரு காளைச் சண்டை வீரனைப் பற்றியது. அவன் பெயர் மானுவல் கார்ஸியா. ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக வலம் வந்தவன். ஆனால் இப்பொழுது..?  வாய்ப்புக் கேட்டு ரெடினாவை அணுகுகிறான்.  உயிரோடுதான் இருக்கிறாயா?  அடிபட்டுக் கொண்டாயாமே? வேறு வேலை தேடிக் கொள்ள வேண்டியது தானே? என்கிறான்  ரெடினா அலட்சியமாக. மானுவல் தளராமல் பதில் கூறுகிறான். எனக்குத் தெரிந்த வேலை காளையோடு சண்டை இடுவது மட்டுமே என்கிறான்.  அப்படி என்றால் உன்னை மாற்று வீரனாகத்தான் களமிறக்க முடியும் என்கிறான் ரெடினா. நான் ஒருபொழுதும் மாற்று வீரனாகக் களம் இறங்கியதில்லை என்கிறான் மானுவல். உனது இஷ்டம் என்கிறான் ரெடினா. தனது நிலைமையை எண்ணி வேறு வழியின்றி ஒப்புக் கொள்கிறான் முன்னாள் ...

சர்மா.ரங்கூன்..சிவாஜி

  பர்மா தற்போது மியான்மர் என்று அழைக்கப்படுகிறது. அதன் தலைநகர் ரங்கூன் தற்போது யாங்கே என்று அழைக்கப்படுகிறது. இந்த ரங்கூன் ஒரு திரைப்பட நடிகரின் திரை வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அவர் சிவாஜி கணேசன்.  அது அவருடைய முதல் படம். பராசக்தி. ஓரு அழகான மாடுலேஷனில் ரங்கூன் என்ற பெயர் அவர் வாயில்புகுந்து புறப்படும்.  தமிழன் பிறக்க ஓரிடம் பிழைக்க ஓரிடம் என்று பரிகாசக் குரலில் சொன்ன பின்பு ரங்..கூன் என் உயிரை வளர்த்தது என்பார். சகோதரர்கள் மூவரும் பிழைப்புக்காக பர்மா சென்று வசிக்கிறார்கள். அதுவும் இந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த  பகுதி.  தமிழ் நாட்டில் தங்கைக்குத் திருமணம். சகோதரர்கள் வர இயலாத நிலை.  காரணம் பர்மாவின் மீது ஜப்பானின் தாக்குதல். குண்டுகள் பொழிவு ஆரம்பம். கப்பலில் ஒரு டிக்கெட் தான் கிடைக்கிறது.  எல்லோருக்கும் இளையவனான குணசேகரனை பெரும் பொருளோடு அனுப்பி வைக்கிறார்கள். போர் சூழ்நிலையின் காரணமாக கப்பல் மிகவும் தாமதமாக சென்னை வருகிறது. குணசேகரன் ஹோட்டலில் தங்கும் போது உடமைகளையும் பொருளையும் இழக்கிறான். பித்தனைப் போல் நடித்துத் திரிகிறான். ...

நான்

  நான் - மகாகவி பாரதியார் வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானில் வளரும் மரமெலாம் நான், காற்றும் புனலும் கடலுமே நான் விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், வாரியினுள் உயிரெலாம் நான், கம்பனிசைத்த கவியெலாம் நான், காருகர் தீட்டும் உரவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம் எழில்நகர் கோபுரம் யாவுமே நான், இன்னிசை மாதரிசையுளேன் நான், இன்பத்திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான், பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். மந்திரங்கோடி இயக்குவோன் நான், இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்; தந்திரங் கோடி சமைத்துளோன் நான். சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், அவை பிழையாமே சுழற்றுவோன் நான், கண்டல் சக்திக் கணமெலாம் நான் காரணமாகிக் கதித்துளோன் நான். நானெனும் பொய்யை நடத்துவோன் நான், ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்; ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் அறிவாய் விளங்குமுதற்சோதி நான்."

சாந்தமு லேகா

  தி ஜானகிராமன் அருமையாகப் பாடுவாராம். அவருடைய கதைகளில் இசை பற்றிய குறிப்புகள் இயைந்து வரும். அத்தனை நுணுக்கமாக எழுதி இருப்பார். அது சிறுகதைகள் ஆனாலும் சரி, மோகமுள் போன்ற நாவல்கள் ஆனாலும் சரி. இசைக் கச்சேரிகளில் கேட்டு அனுபவிக்கும் போது அந்த வரிகள் மனதில் ஓடும்.  மோகமுள் நாயகன் பாபு. அவன் பாடும் தன்மை எத்தகையது என்பதைப் போகிற போக்கில் ஒரு சின்ன கதாபாத்திரத்தின்  மூலம் சொல்லியிருப்பார் ஜானகிராமன். நாவலின் துவக்கத்திலேயே. பின்பு நாவலின் ஓரு பகுதியில் பாபு பூங்காவிற்கு வருவான். அங்கே ரேடியோப் பெட்டியில் வீணை ஒலிக்கும். அது பாபுவிடம் என்ன சொல்கிறது?  நீயா.. நீயா.. நீ ஏன் இப்படிச் செய்தாய்? என்று அங்கலாய்க்கிறது. இது போன்ற அனுபவம் நமக்கும் வாய்த்திருக்கிறது. வயலின் தந்திகள் வில்லோடு இழையும் போது ஐயா.. ஐயா என்ற சன்னக் கதறல் ஒலித்திருக்கிறது. பாபுவும் அவன் அப்பாவும் கச்சேரி கேட்டுவிட்டு பனி பெய்யும் பின்னிரவில் வீட்டுக்கு வருவது போல எனக்கும் நேர்ந்திருக்கிறது.  நாவலின் பின்னொரு பகுதியில் இப்படி எழுதுகிறார். "'மேலே மாறி மாறி வந்த நினைவுகளுக்கு அடியில் பேகடை ராகம் கமகங்க...

அலையும் பறவைகள்

   ரவீந்திர நாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்புகளில் ஒன்று Stray Birds என்பது.   அதில் எல்லாம் சின்னச் சின்ன கவிதைகள்.அதிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகளை மொழி பெயர்த்தேன்.                         1 நீரில் மீன் மெளனமாக இருக்கிறது நிலத்தில் மிருகம் சத்தம் போடுகிறது காற்றில் பறவை கானம் பாடுகிறது ஆனால் கடலின் மெளனம் நிலத்தின் சத்தம் காற்றில் கானம் எல்லாம் மனிதருள் இருக்கிறது                                2 அலையும் கோடை காலப் பறவைகள் என் சன்னல் அருகே வருகின்றன பாடிப் பறந்து செல்கின்றன படபடத்து இலையுதிர் கால மஞ்சள் இலைகள் பாடல் இன்றித் தரையில் விழுகின்றன  பெருமூச்சு விட்டபடி                      ...

காற்றில் ஆடும் கிளிக் கூடு

  மரத்தின் கிளைகளில் அமர்ந்து கிளி கீ கீ என்று கத்தியது. தனது இருப்பைச் சொன்னது. அதன் உடல் பச்சையாகவும் மூக்கு சிகப்பாகவும் இருந்தது. சிறிது நேரம்.. அது ஜிவ்வென்று விண் பரப்பில் பறந்து எங்கோ சென்றது. கூட்டில் இருந்து கிளி எப்போதும்  கோலிந்தா கோவிந்தா என்று அழைக்கும். நாச்சியார் திருமொழி அப்படிச் சொல்லும். உடல் ஒரு கூடு. உயிர் அதில் உறையும் கிளி. அதுதான் கோவிந்தா என்று எப்போதும் கூவுகிறது. உண்ணத் தராமல் உடலை வாட்டினாலும் அது கோவிந்தா என்று கூவ மறப்பதில்லை.  எண்பதுகளில் ஒரு திரைப்படம் பார்த்தேன். மலையாளத் திரைப்படம். அதன் பெயர் காட்டத்தே கிளிக்கூடு. போஸ்டர் அதைக் காற்றில் ஆடும் கிளிக் கூடுகள் என்று மொழி பெயர்த்திருந்தது. படத்தை இயக்கியவர் பரதன். கோபி, ஸ்ரீவித்யா, மோகன்லால், ரேவதி முக்கிய வேடம் ஏற்றிருந்தார்கள். அவர் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். ஷேக்ஸ்பியர் கிருஷ்ணன் பிள்ளை என்று எல்லோரும் அழைப்பார்கள். சாரதா அவரது மனைவி.  அவர்களுக்கு நண்டும் சிண்டுமாக மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண். அப்பாவின் மேல் காலைப் போட்டுக் கொண்டு தூங்கும் குழந்தைகள். காலையில் கல்லூரிக்குச் ...

வாழ்க நீ எம்மான்

  வாழ்க நீ எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம்   தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு  பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம! நீ வாழ்க! வாழ்க! இப்படி எழுதினார் பாரதி. காந்தி தன் வாழ்வெல்லாம் நடந்தபடி இருந்தார். ஆயிரம் ஆயிரம் அக்கறைகள், கவலைகள் அவருக்கு. இந்த தேசம் குறித்து. அவை எங்கெல்லாம் அவரை இட்டுச் சென்றதோ அங்கெல்லாம் சென்றார்.  அது தண்டியாக இருந்தாலும் சரி. நவகாளியாக இருந்தாலும் சரி. அவரது அக்கறை இந்த தேசம் தழுவி இருந்தது.  அன்பு அவர் விடுத்த சேதியாக இருந்தது. உண்மை அவருக்கு வழி காட்டும் விளக்காக இருந்தது. அவர் உள்ளத்தால் பொய்யாது ஒழுகினார்.  உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உள்ளார். தி சந்தானம்

காலையும் நீயே

  அந்தப் பாடலை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். வானொலிப் பெட்டியிலிருந்து மெல்லக் கசிந்து வரும் அந்தப் பாடல். ஒரு மென்மையான ஆலாபனை சந்தனத்தை இழைத்தது போல. அது என்ன குரல்! என்னமாய் மனதை வருடுகிறது! பின்பு ஜல். ஜல்..ஜல்..ஜல்..ஜல்ஜல்.. என்று சலங்கையின் ஓசை. காலையும் நீயே மாலையும் நீயே என்று ஒரு மென்குரல் மனதை மயக்கும். பின்பு ஒரு தேன் குரல் பதில் போல மிழற்றும். ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பருவத்திலும் இந்தப் பாடலைக் காது கொடுத்து கேட்பது ஒரு புது அனுபவம் தான். மேலே சொன்ன பாடல் தேன் நிலவு என்ற திரைப்படத்தில் வரும். 1962 ம் வருடம் இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஸ்ரீதர் இயக்கம். ஏ எம். ராஜா இசையமைத்து பாடியிருந்தார். உடன் பாடியவர் எஸ்.ஜானகி.  பல வருடங்கள் கழித்து மறு முறை வெளியான போது இந்தப் படத்தைப் பார்த்தேன்.  அப்போது தான் நான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தேன். .பாடல் காட்சியில் வைஜயந்தி மாலா ஆடுவார். நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். பாலில் விழுந்த பழங்களைப் போலே என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும்.  பாலைக் கறப்பது போல் அபிநயித்து ஒரு குவளையில் நிரப்புவதைப் போல...

கடைசி இலை

  பள்ளி இறுதி வகுப்பில் பாடப் பகுதியாக ஒரு கதை வந்தது. அதன் தலைப்பு "கடைசி இலை" (The Last Leaf) .O.ஹென்றி எழுதிய கதை. ஹென்றியின் கதைகளில் ஒரு இறுதித் திருப்பம் இருக்கும். அது யாரும் எதிர்பாராத ஒன்றாக இருக்கும். இரண்டு பெண்கள். ஜான்ஸி மற்றும் ஸ்யூ. அவர்கள் ஒரு வீட்டின் மாடியில் வசிக்கிறார்கள். பிழைப்புக்கான ஓவியமும் பிடித்தமான உணவு வகைகளும் அவர்களைப் பிணைத்து வைத்திருக்கிறது. நகரில் நிமோனியா காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஜான்ஸிக்கு நிமோனியா காய்ச்சல் கண்டு விடுகிறது. டாக்டர் வந்து சிகிச்சை செய்கிறார். அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறார்.  உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை. டாக்டர் ஸ்யூவை  தனியே அழைத்துப் பேசுகிறார். நான் மருந்து தரலாம். அது உடலுக்கு மட்டுமே. நோயாளிக்கு வாழும் இச்சை இல்லை. அது இருந்தால் நோய் குணமாகும். சத்தான உணவுகளைக் கொடு என்று சொல்லி விடைபெறுகிறார். ஸ்யூ படுக்கையில் இருக்கும் ஜான்ஸியைப் பார்க்கிறாள். எத்தனை மெலிந்து விட்டாள். கை கால் முகமெல்லாம் வெளிறியிருந்தது. அவள் குரல் மெலிதாக ஒவித்துக் கொண்டிருந்தது. பன்னிரண்டு.. பதினொன்று… அவள் வாய் முணுமுணுக்...