துக்காராம் மராத்தியில் பாடல்கள் எழுதினார். கனிந்த பக்தியில் பிறந்த பாடல்கள் அவை. அபங்கு (Abhang) என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள். இவ்வகைப் பாடல்களை கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் பாடக் கேட்டிருக்கிறேன். வாழ்க்கைத் துயரங்கள் துக்காராமை விரட்டியது. விட்டலனின் நினைவில் அவர் கணத்துக்குக் கணம் மீண்டு எழுபவராக இருந்தார். தன்னை மறந்த லயிப்பில் பாடல்கள் பிறந்த வண்ணம் இருந்தன. ஊரும் உறவும் அவரைப் புரிந்தால் தான் என்ன? புரியாமல் போனால் தான் என்ன? எளிய வரிகள் சிறிய அலைகள் போல எழுகின்றன. பெரிய பாறை போன்ற த்வைத அத்வைத சிந்தனைகளின் மேல் மெல்ல மோதுகின்றன. தனது தன்மையில் நிற்கின்றன. இந்தப் பாடலைப் பாருங்கள். தண்ணீர் தன்னையே பருக முடியுமா? மரம் தனது கனிபைத் தானே ருசிக்குமா? கடவுளை வணங்குபவர் அவரிடமிருந்து வேறுபட்டே இருக்க முடியும் அப்படி இருந்தால் தான் அவரது ஆனந்தமான அன்பைத் தெரிந்து கொள்ள முடியும் கடவுளும் அவனும் ஒன்று என்று சொல்வானே யானால் அந்த ஆனந்தமும் அன்பும் மறைந்து விடும் உடனடியாக கவிதையைப் பற்றி மிகவும் அழகாக இப்படிச் சொல்கிறார். To arrange words in some order Is not the sam...